போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தின் போது பெருமளவானவர்களை கொலை செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோடுட்டேர்டேயினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது.
மனித உரிமை அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களும் இதனை வரவேற்றுள்ள அதேவேளைசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கு தொடுநர் கரீம் கான் இந்த கைதினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தின் கீழ் மிகமோசமான குற்றங்கள் என கருதப்படும் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான எங்கள்பணியை தொடர்வதற்கு இது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் கைதுசெய்யப்பட்ட பிலிப்பைன்சின் 79 வயது ஜனாதிபதி விமானம் மூலம் நெதர்லாந்திற்கு கொண்டுவரப்பட்டார்.
சந்தேகநபர் ஒருவர் தங்களிடம் ஒப்படைக்கும்போது முன்னெச்சரிக்கையாக அவருக்கு மருத்துவ வசதிகளை வழங்கவேண்டும் என்ற வழமையான நடைமுறையை பின்பற்றியுள்ளதாக ஹேக் நீதிமன்றம் தெரிவித்துள்ள போதிலும் பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கவில்லை.
அவரது விமானநிலையம் நின்றிருந்த ஹாங்கருக்கு ஒரு அம்புலன்ஸ் சென்றது,மருத்துவர்கள் சக்கரநாற்காலியை உள்ளே கொண்டு சென்றனர் ஹெலிக்கொப்டர் ஒரு பறந்தவண்ணமிருந்தது,அதன் பின்னர் கறுப்பு நிற வாகனம் பொலிஸ் பாதுகாப்புடன் சென்றது அது எங்கு செல்கின்றது என்பது தெரியவில்லை என ஏபி தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களிற்கு டுட்டர்டே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்,அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படும்,அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அறிந்துவைத்துள்ளார் என்பது உறுதி செய்யப்படும்,
விசாரணைகள் இடம்பெற்று குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களிற்கும் அவர்களது குடும்பத்தவர்களிற்கும் நீpதி கிடைப்பதனை நோக்கிய மகத்தான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கை இது என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஜெரி அபெல்லா தெரிவித்துள்ளார்.
எனவே இது பிலிப்பைன்சிலும் அதற்கு அப்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தவர்களிற்கான நம்பிக்கையான அறிகுறியாகும் என தெரிவித்துள்ள அவர் இந்த கைது மிகமோசமான குற்றங்களில் ஈடுபட்ட உலக தலைவர்கள் உட்பட சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள் உலகில் எங்கிருந்தாலும் நீதியை எதிர்கொள்வார்கள் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM