தரகு பணத்துக்காக கடந்த அரசாங்கம் செய்ததை இந்த அரசாங்கம் செய்யாது என எதிர்பார்க்கிறோம் - வே, இராதாகிருஷ்ணன்

Published By: Vishnu

12 Mar, 2025 | 09:59 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கிழங்கு அறுவடை காலத்தில் அரசாங்கம் கிழங்கு இறக்குமதி செய்வதை நிறுத்தி, விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். கடந்த அரசாங்க காலத்தில் தரகு பணத்துக்காக இவ்வாறு செய்தார்கள். அதனை இந்த அரசாங்கம் செய்யாது என எதிர்பார்க்கிறோம் என வே, இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் 360 நாட்களும் மரக்கறி விவசாயம் செய்யும் இடம்  நுவரெலியா பிரதேசமாகும். அதனால் அந்த விவசாயிகள் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் தொடர்பில் தேடிப்பாரக்க விவசாய அமைச்சர் அந்த பிரதேசத்துக்கும் விஜயம் செய்ய வேண்டும். குறிப்பாக கிழங்கு பிடுங்கும்போது அரசாங்கம் கிழங்கு இறக்குமதி செய்கிறது. கடந்த அரசாங்கமும் இதனை செய்தது. தரகுப்பணத்துக்கே செய்தார்கள். இந்த அரசாங்கம் விவசாயிகள் தொடர்பில் சிந்தித்து அவ்வாறு செய்யாது என எதிர்பார்க்கிறோம்.

நுவரெலியாவில் ஒரு கிலாே  கரட் 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அது கொழும்புக்கு கொண்டுவந்து விற்பனை செய்யும்போது கிலாே 1000 ரூபாவாகிறது. விவசாய திணைக்களத்தின் சரியான முகாமைத்துவம் இல்லாமையே இதற்கு காரணம். அதேபோன்று மலையகத்தில் விவசாய மண், மற்றும் இதர பரிசோதனைகளுக்கு விவசாயிகளுக்கு  அனுமதி வழங்க வேண்டும். அது இடம்பெறுவதில்லை. இது தொடர்பில் அரசாங்கத்தை குற்றம் சுமத்தப்போவதில்லை. எதிர்காலத்தில் இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே தெரிவிக்கிறேன்.

மேலும் ஒரு கிலாே கிழங்கு உற்பத்தி செய்ய 200 ரூபா செலவாகிறது. அப்படியானால் 250 ரூபாவுக்காவது விற்பனை செய்தாலே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது. அதனால் அரசாங்கம் ஏப்ரல், மே.ஜூன் மாதங்களில் கிழங்கு இறக்குமதியை நிறுத்த வேண்டும் அல்லது இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்.

அதேநேரம் நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு மேலதிக வருமானமாக அவர்களுக்கு பொதுவான கால்நடை பண்ணை அமைத்து கொடுத்து அவர்களின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வழி ஏற்படுத்திக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறான ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் இருப்பதாலே அந்த விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோன்று  நுவரெலியா மாவட்டத்தில் பால் உற்பத்திக்கு தேவையான வசதிகளை ஏற்படு்த்திக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:26:09
news-image

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது...

2026-03-14 17:20:13
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:12:12
news-image

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை...

2026-03-14 17:05:14
news-image

சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918...

2026-03-14 17:02:52
news-image

கட்டானவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர்...

2026-03-14 16:39:49
news-image

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை...

2026-03-14 16:11:41
news-image

காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான...

2026-03-14 16:08:29
news-image

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவைச் செயற்படுத்துக:...

2026-03-14 16:08:01
news-image

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை...

2026-03-14 15:43:28
news-image

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி...

2026-03-14 15:15:53
news-image

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய...

2026-03-14 15:03:57