தேர்தல் பங்குதாரர்களுடனான முல்லைத்தீவு மாவட்ட மட்ட கலந்துரையாடல்

12 Mar, 2025 | 08:52 PM
image

தேர்தல் செயன்முறையில் பெண்கள், இளையோர் மற்றும் குறைந்தளவு பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் குழுக்களின் ஈடுபாடு மற்றும் தேர்தல் தொடர்பான தகவல்களின் தாக்கம் பற்றி தேர்தல் பங்குதாரர்களிடையே முல்லைத்தீவு மாவட்ட மட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. 

தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தினால் அரசியல் பன்முகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் எனும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக அரசியல் பன்மைத்துவம் தேர்தல் செயன்முறைகளில் பிரஜைகளின் / குடிமக்களின் ஈடுபாடு மற்றும் தகவல்களின் தாக்கம் எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல்   முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (12) நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் த.கேதுர்சாவின் தலைமையில் முல்லைத்தீவு இலங்கை செஞ்சிலுவை சங்க மண்டபத்தில் இன்று (12) காலை 9.30 மணி முதல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.

இந்த கருத்தரங்கில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் A .M.N. விக்ரர் மற்றும் வடக்கு மாகாண இணைப்பாளர் எஸ். அனோஜன் ஆகியோர் கலந்துகொண்டு “தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தினால் அரசியல் பன்மைத்துவம் தேர்தல் செயன்முறைகளில் பிரஜைகளின்/ குடிமக்களின் ஈடுபாடு மற்றும் தகவல்களின் தாக்கம்” எனும்  விடயப்பரப்பில் இலங்கை முழுவதும் 800 பேரிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி குறை நிறைகள், மேலும் சேர்க்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயும் முகமாக இந்த செயலமர்வு இடம்பெற்று வருகிறது. 

இக்கலந்துரையாடலில் அரசியல் பிரதிநிதிகள், பொலிஸார், ஊடகவியலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09