dawn
express tribune
பாக்கிஸ்தானில் பிரிவினைவாதிகளால் பிடிக்கப்பட்ட புகையிரதத்திலிருந்து மீட்டகப்பட்டவர்கள் தாங்கள் நேரில் பார்த்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
கடவுள் எங்களை காப்பாற்றினார் என முதிய பெண்ணொருவர் குவாட்ட புகையிரதநிலையத்தில் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட பயணிகள் இந்த புகையிரதநிலையத்திற்கே கொண்டுவரப்பட்டுள்ளனர்.
கடவுள் எங்களிற்கு உதவுவார் ஆனால் தற்போது நிலைமை சரியில்லைஎன கவலையுடன் ஒருவர்தெரிவித்துள்ளார்.
ஆர்பிஜியொன்று புகையிரதத்தின் இயந்திரத்தை தாக்கியது அதன் பின்னர் துப்பாக்கி பிரயோகம் ஆரம்பமானது என நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ள அவர் ஆர்பிஜி தாக்குதல்களும் பாரிய வெடிப்புச்சத்தங்களும் கேட்டன, என தெரிவித்தார்.
அவருடன் காணப்பட்ட பெண்ணொருவரும் அதே போன்ற விடயங்களை தெரிவித்துடன் கடவுள் எங்களை காப்பாற்றி விட்டார் கடவுள் எங்களை அழிக்கட்டும் என குறிப்பிட்டார்.
மீட்கப்பட்ட பயணிகளில் ஒருவர் முகமட் அஸ்ரவ். இவர் குவாட்டாவிலிருந்து லாகூரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார்,புகையிரதத்தின் மீதான தாக்குதலால் எவராவது உயிரிழப்பதை பார்த்தீர்களா என்ற கேள்விக்கு ஆறு ஏழு பேர் உயிரிழந்ததை பார்த்தேன் என அவர் குறிப்பிட்டார்.
அனைவரும் அச்சத்தினால் அமைதியாகயிருந்தனர் எவரும் எங்கும் எவரையும் பார்க்கவில்லை என முதியவர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர்கள் பெண்களையும் முதியவர்களையும் தனியாக நிற்கச்சொன்னார்கள்பின்னர் எங்களை போகச்சொன்னார்கள் என தெரிவித்த அவர் நாங்கள் ஏழு எட்டு கிலோமீற்றர் நடந்து பனீர் புகையிரத நிலையத்தை அடைந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
புகையிரதத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது நிலவிய குழப்பமான நிலையை விபரித்துள்ள மீட்கப்பட்ட பயணியொருவர் பாதுகாப்பிற்காக பயணிகள் புகையிரதத்திற்குள் விழுந்துபடுக்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் எனகுறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோக சத்தங்களை வெடிப்புச்சத்தங்களை கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் அனைவரையும் புகையிரதத்திலிருந்து இறங்குமாறு கேட்டுக்கொண்டனர் ஆனால் பயணிகள் புகையிரதத்திலிருந்து இறங்க தயங்கினார்கள் என பயணியொருவர் நான் பிள்ளைகளை தூக்கிக்கொண்டு இறங்கினேன் அவர்கள் இறங்கச்சொல்கின்றார்கள்,
நாங்கள் அவர்கள் சொல்வதை செவிமடுக்கவேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் உள்ளே வந்து சுட்டுவிடுவாhகள் " என அந்த பயணி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM