திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு தன்னை கைது செய்ய முயல்வதாக குறிப்பிட்டு அதனை தடுக்குமாறு கோரி பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஞானசார தேரரின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலலியத்தவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மனுவானது பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், அணில் குணரத்ன ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணை செய்யப்படவுள்ளது.
திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக குமார, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட நால்வரை பொறுப் புக் கூறத்தக்க தரப்பாக பெயரிட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முறையான விசாரணை ஒன்று இல்லாமல்ட தன்னைக் கைது செய்ய திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு முயல்வதாகவும், அதனால் தன்னுடன் தொடர்புபட்ட விசாரணைகள் நிறைவுறும் வரை அல்லது சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் வரையில் தன்னை கைது செய்வதை தடுத்து இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இன, மதங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தும் விதமாக செயற்படுவதாக தெரிவித்து திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு (ஓ.சி.பி.டி) ஒழுங்கமைக்கப்பட்ட விசாரணை ஒன்று இன்று இன்றி தன்னை கைதுசெய்ய முயல்வதாகவும் இதனால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் ஞானசார தேரரின் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் முறையான விசாரணை ஒன்று நிறைவுறும் வரை தன்னை கைது செய்யவேண்டாம் என தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியுள்ள ஞானசார தேரர், தனக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ள நிலையில், அந்த விசாரணைக ளும் இடம்பெற்று வருவதையும் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM