ஞான­சா­ரரின் மனு 22 ஆம் திகதி விசா­ர­ணைக்கு

Published By: Robert

15 Jun, 2017 | 09:37 AM
image

திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு தன்னை கைது செய்ய முயல்­வ­தாக குறிப்­பிட்டு  அதனை தடுக்­கு­மாறு கோரி பொது பல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ரினால் உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனு  எதிர்­வரும் 22 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.  

ஞான­சார தேரரின் சட்­டத்­த­ர­ணி­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி டிரந்த வல­லி­யத்­தவின் ஆலோ­ச­னையின் பிர­காரம் இந்த அடிப்­படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள நிலையில் இந்த மனு­வா­னது பிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப், அணில் குண­ரத்ன ஆகியோர் அடங்­கிய இருவர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் முன்­னி­லையில்  விசா­ரணை செய்­யப்­ப­ட­வுள்­ளது. 

திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜனக குமார, சட்­டமா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய உள்­ளிட்ட நால்­வரை பொறுப் புக் கூறத்­தக்க தரப்­பாக பெய­ரிட்டே இந்த மனு தாக்கல்  செய்­யப்­பட்­டுள்­ளது.

முறை­யான விசா­ரணை ஒன்று இல்­லா­மல்ட   தன்னைக் கைது செய்ய திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு முயல்­வ­தா­கவும், அதனால் தன்­னுடன் தொடர்­பு­பட்ட விசா­ர­ணைகள் நிறை­வுறும் வரை அல்­லது சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொள்ளும் வரையில் தன்னை கைது செய்­வதை தடுத்து இடைக்­கால தடை உத்­த­ர­வொன்­றினை பிறப்­பிக்­கு­மாறும் அந்த மனுவில் கோரப்­பட்­டுள்­ளது.

இன, மதங்­க­ளுக்கு இடையில் மோதல்­களை ஏற்­ப­டுத்தும் வித­மாக செயற்­ப­டு­வ­தாக தெரி­வித்து திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு (ஓ.சி.பி.டி) ஒழுங்­க­மைக்­கப்­பட்ட  விசா­ரணை ஒன்று இன்று இன்றி தன்னை கைதுசெய்ய முயல்­வ­தா­கவும் இதனால் தனது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் ஞான­சார தேரரின் குறித்த மனுவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 

இதனால் முறை­யான விசா­ரணை ஒன்று நிறை­வுறும் வரை தன்னை கைது செய்யவேண்டாம் என தடை உத்த­ரவு பிறப்பிக்­கு­மாறு கோரி­யுள்ள ஞான­சார தேரர், தனக்கு விடுக்­கப்­பட்­டுள்ள உயிர் அச்­சு­றுத்தல் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ள நிலையில், அந்த விசாரணைக ளும் இடம்பெற்று வருவதையும் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22