பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுறுத்துவதற்கான கொள்கை மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுங்கள் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசிடம் வலியுறுத்தல்

Published By: Vishnu

10 Mar, 2025 | 08:45 PM
image

(நா.தனுஜா)

பெண்களுக்கு எதிரான சகலவிதமான வன்முறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருவதுடன், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அதனை இலக்காகக்கொண்ட சட்ட, கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

 உலகளாவிய ரீதியில் பெண்களின் அடைவுகள், சமூக முன்னேற்றத்தில் அவர்களது பங்களிப்பு, பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் அவற்றிலிருந்து மீண்டெழும் ஆற்றல் மற்றும் சமத்துவத்துக்கான அவர்களது தொடர் போராட்டம் என்பவற்றுக்கான அங்கீகாரத்தை வழங்கும் நோக்கில் வருடாந்தம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி மகளிர் தினம் அனுட்டிக்கப்படுகின்றது.

இவற்றில் எத்தகைய முன்னேற்றங்கள் அடையப்பட்டாலும், பாலின சமத்துவம் என்பது இன்னமும் முழுமையாக எட்டப்படவில்லை. பெரும் எண்ணிக்கையான பெண்கள் ஒடுக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கும் முகங்கொடுத்துவருவதுடன் அவர்களுக்கான சமவாய்ப்புக்களும், சட்ட ரீதியான பாதுகாப்பும் மறுக்கப்படுகின்றன. பல பெண்களுக்கு கல்வி, பொருளாதார சுதந்திரம், பாதுகாப்பு என்பவற்றுக்கான அடிப்படை உரிமை மறுக்கப்படுகின்றது.

பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கையினால் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பினும், சவால்கள் இன்னமும் தொடர்கின்றன. நாட்டின் மொத்த சனத்தொகையில் 52 சதவீதமாக உள்ள பெண்கள் தலைமைத்துவப்பொறுப்பில் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே உள்வாங்கப்படுகின்றனர். பெரும் எண்ணிக்கையான பெண்கள் வறுமையினாலும், பாலின அடிப்படையிலான வன்முறைகளினாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி அவர்கள் நீதியை நாடுவதிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் பெண்களுக்கு எதிரான சகலவிதமான வன்முறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருவதுடன், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை மீளவலியுறுத்துகின்றோம். அதேபோன்று பெண்கள் அவர்களது உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்குத் தடையாக இருக்கும் அசமத்துவம் மற்றும் அநீதிகளை முற்றாகக் களையவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றோம். அத்தோடு இதுசார்ந்த சட்ட, கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - உஸ்பெகிஸ்தான் இடையே புதிய...

2026-07-13 11:36:24
news-image

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க...

2026-07-13 11:20:46
news-image

மட்டக்களப்பு தளவாய் வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு...

2026-07-13 11:00:38
news-image

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ;...

2026-07-13 11:13:39
news-image

இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவரான...

2026-07-13 10:20:18
news-image

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்...

2026-07-13 09:54:26
news-image

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ...

2026-07-13 09:56:19
news-image

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில்...

2026-07-13 09:25:14
news-image

பேராதனை, கொழும்பு ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன்...

2026-07-13 09:18:27
news-image

டெங்கு அபாயத்தால் மூடப்பட்டிருந்த கட்புல, அரங்கேற்றக்...

2026-07-13 09:16:08
news-image

மஹரகமவில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!

2026-07-13 09:06:29
news-image

தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் விடங்களில்...

2026-07-13 08:53:19