கண்புரையால் பாதிக்கப்பட்டவர்களில் ஐம்பது சதவீதத்தினர் இதற்குரிய பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு, முழுமையான நிவாரணத்தை பெறுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. அத்துடன் சத்திர சிகிச்சைக்கு பிறகு ஒரு மாத காலம் வரை வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கும் மருந்தியல் சிகிச்சை நடைமுறையை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதற்கு பிறகு தான் உங்களுடைய பார்வை திறன் மேம்படும் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
முதுமை காரணமாகவும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு உபாதை காரணமாகவும் எம்மில் ஐம்பது வயதை கடந்த ஆணிற்கும், பெண்ணிற்கும் கண் புரை பாதிப்பு ஏற்பட்டு, பார்வையில் தடுமாற்றம் ஏற்படக்கூடும்.
இவர்களுக்கு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று, அங்குள்ள வைத்திய நிபுணர்களை அணுகி, அவர்கள் பரிசோதித்து பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்த பிறகு சத்திர சிகிச்சையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பார்கள். தருணத்தில் சத்திர சிகிச்சையுடன் உங்களுடைய பார்வைத்திறன் மீட்டெடுக்கப்படுவதுடன் தொடர்ந்து பாதிப்பு நிகழாமல் இருப்பதற்காக வைத்தியர்கள் பரிந்துரை பட்டியலை முன் வைப்பர்.
இந்தப் பட்டியல் ஒரு மாத காலம் அல்லது ஒன்றரை மாத கால அவகாசத்தினை கொண்டிருக்கும். இந்த தருணத்தில் வைத்தியர்கள் நான்கு வெவ்வேறு வகையினதான கண்களில் செலுத்திக் கொள்ளக்கூடிய பிரத்யேக மருந்தியலை பரிந்துரைத்திருப்பார். இந்த நான்கு வகையினதான மருந்தினை தவறாமல் பாவிக்க வேண்டும். சிலருக்கு இதை தவிர்த்து வேறு சில பிரத்யேக மருந்துகளையும் வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்திருக்கலாம்.
தற்போது கண்புரைக்கான சத்திர சிகிச்சை மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில் நுட்பங்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதால் இதனுடைய வெற்றி வீதம் என்பது அதிகம். இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு மறுநாள் அல்லது மூன்று நாட்களுக்குள் செல்போனை பார்வையிடுவது போன்ற அனைத்து பார்வை திறன் கொண்ட பணிகளை மேற்கொள்ளலாம். அதே தருணத்தில் கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை நீர் தொடர்பான சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.
டொக்டர் அமர் அகர்வால்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM