கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினுள் இருந்து சுமார் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட பெறுமதிகொண்ட இரண்டரை கிலோ தங்கத்தை வெளியே கடத்தி வர முயன்ற விமானப்படை வீரர் ஒருவர் நேற்று சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 32 வயதுடைய தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த , பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றி வந்த விமானப்படை வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹந்தவ தெரிவித்தார்.
விமான நிலையத்தின் பயணிகள் வருகை தரும் பகுதியில் வெளியேறும் வாயிலுக்கு அருகில் வைத்து குறித்த விமானப்படை வீரரைக் கைது செய்ததாகவும் அவரின் கால்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2.65 கிலோ பெறுமதியான தங்கத்தினை தாம் மீட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த தங்கத்தினை வெளியில் வரும் பயணி ஒருவரிடம் ஒப்படைக்கும் நோக்குடனேயே அவர் இவ்வாறு மறைத்து கடத்தி வந்துள்ளதாகவும் இத்தகைய கடத்தலுடன் தொடர்புடைய பல விடயங்களை குறித்த விமானப்படை வீரர் ஏற்கனவே பல முறை செய்துள்ளமையும் சுங்கப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த ஒருவர் அதனை விமான நிலையத்துக்கு வெளியே கொண்டு செல்லும் நோக்குடன் இந்த விமானப்படை வீரரிடம் அதனைக் கையளித்திருக்க வேண்டும் என சந்தேகிக்கும் சுங்கப் பிரிவு விசாரணையாளர்கள், விமான நிலைய கழிவறையில் வைத்து இந்த தங்கமானது விமானப்படை வீரருக்கு கைமாற்றப்பட்டு அங்கு வைத்து அந்த வீரரால் அவை கால்களுக்குள் மறைக்கப்பட்டு பின்னர் கடத்தப்பட்டுள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM