மனி­த­னாக பிறந்து செபத்­தாலும் தவத்­தாலும் இறை நிலைக்கு உயர்த்­தப்­பட்ட புனித அந்­தோ­னியார் - இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருவிழா 

Published By: Priyatharshan

13 Jun, 2017 | 09:45 AM
image

கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் திருத்­த­லத்தின் இறு­திநாள் உற்­சவம் இன்று நடை­பெ­று­கி­றது. ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்கள் இன, மத பேத­மின்றி இத்­தி­ருத்­த­லத்­துக்கு வந்து தமது கோரிக்­கை­க­ளையும் பக்­தி­யையும் வெளிப்­ப­டுத்­து­கி­றார்கள். பலர் புனித அந்­தோ­னி­யா­ரைப்­பற்­றிய பூரண விப­ரத்தை அறிய ஆவ­லா­யுள்­ளனர்.

போர்த்­துக்­கல்லில் வசித்­து­வந்த பெரும் செல்­வந்­த­ரான மார்டின் வின்­சன்ரே  டீ புளோஸ் என்­ப­வ­ருக்கும் திரேசா பயஸ் தவரே என்­ப­வ­ருக்கும் குழந்­தை­யாகப் பிறந்­த­வரே அந்­தோ­னி­யா­ராவார்.

அந்­தோ­னி­யாரின் பெற்­றோரும் உற­வி­னரும் செல்­வந்­தர்­க­ளாக விளங்­கி­யதால் அந்­தோ­னி­யாரை நன்கு படிப்­பித்து பெரிய உயர் தொழிலில் அமர்த்த வேண்டும் என்­பது அவர்­க­ளது விருப்­ப­மாக இருந்­தது. ஆயினும் அந்­தோ­னியார் மறைக்­கல்­வி­யையே விரும்பிப் படித்தார்.

ஆகவேஇ பெற்­றோரின் விருப்பம் நிறை­வே­றாமல் போகப்­போ­கி­றது என்­பதை பெற்றோர் உணர்ந்­த­ன­ரா­யினும் தனது மகன் இறை­வனின் தொண்­ட­னாகப் போகிறார் என்­பதால் மன ஆறு­த­ல­டைந்­தனர்.

அந்­தோ­னியார் தனது 15ஆவது வயதில் தனது செல்வ குடும்­பத்தில் இருந்து பிரிந்து துற­விகள் தங்கும் மடத்­திற்கு சென்று தங்கத் தொடங்­கினார். மடத்தில் தங்­கிய அந்­தோ­னியார் தனது இரு­பத்­தைந்தாம் வயதில் குருப்­பட்­டத்தை பெற்றார்.

ஆரம்­பத்தில் அகஸ்­தீ­னியர் மடத்தில் தங்கி­யி­ருந்த புனிதர் பின்னர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். பின்னர் தனது பெயரான பேடினட் என்­பதை மாற்றி அந்தோனி என வைத்­துக்­கொண்டார். அவரால் வைக்­கப்­பட்ட பெயரே இன்றும் நிலைத்து இருக்­கி­றது. பேடினட் அந்­தோனி என மாறினார். நாம் அந்­தோ­னியார் என கௌர­வ­மாக அழைப்­பது அப்­பெ­ய­ரை­யே­யாகும்.

அந்­தோ­னியார் நீண்­ட­கா­லப்­பணி பாதுவா திருத்­த­லத்­துடன் தொடர்­பு­பட்டது. இத்­தி­ருத்­த­லத்தின் உட்­ப­கு­தியின் ஒரு பகு­தியில் அந்­தோ­னி­யாரின் தேவா­லயம் உண்டு. ஒன்­பது மாபிள்களாலான சுவரைக் கொண்ட இத்­தே­வா­ல­யத்தில் அந்­தோ­னி­யாரின் புது­மைகள் சில அம்­மாபிள்­களில் எடுத்­துக்­காட்­டப்­பட்­டுள்­ளன.

இங்கு அந்­தோ­னி­யாரின் திரு­நாக்கு உடலின் வேறு சில பகு­திகள் ( THE TREASURY CHAPEL OF THE RELICS) என்ற பகு­தியில் வைக்­கப்­பட்­டுள்­ளன. அவரது மேலங்­கியும் பாது­காப்­பான கண்­ணாடி பெட்­டிக்குள் வைக்­கப்­பட்­டுள்­ளது. பாக்­கி­ய­வான்கள் பலர் இவற்றைத் தரி­சித்துச் செல்­கின்­றனர்.

பாதுவா புனித தேவா­ல­யத்தில் இருந்து அந்­தோ­னி­யாரின் உடலின் பாகங்கள் சில கொச்­சிக்­கடை அந்­தோ­னியார் திருத்­த­லத்தின் 175ஆவது வருட ஜுபிலி விழாவின் போது இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்டு இத்­தி­ருத்­த­லத்தில் இன்றும் தரி­ச­னத்­திற்­காக வைக்­கப்­பட்­டுள்­ளது.

உலகின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் இப்­பு­னி­தரின் உறுப்­புக்­களை  வணங்­கவும் அவரை அடக்கம் செய்த பெட்­டியை தொடவும் புனி­தரின் பாதம் பட்ட ஆல­யத்தை விழுந்து கும்­பி­டவும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பாக்­கி­ய­வான்கள் இங்கு வந்த வண்­ணமே இருக்­கின்­றனர்.

இறந்தும் இற­வாமல் என்றும் வாழும் புனித அந்­தோ­னியார் ஜெபத்தால் இறை­வனை அடை­யலாம் என்­பதை நிஜ­வாழ்க்­கையில் காட்­டி­ய­வ­ரா­கிறார்.

இப்­பு­னி­தரின் ஆல­யமே இன்று கொச்­சிக்­க­டையில் அமைந்­துள்­ளது. ஆரம்­பத்தில் களி மண்ணால் ஆரம்­பிக்­கப்­பட்ட மேற்­படி தேவா­லயம் இன்று வான­ளாவி நிற்­கி­றது. தினந்­தோறும் மக்கள் இங்கு இனஇ மத­பே­த­மின்றி வணங்­கிச்­செல்­கின்­றனர். நாட்டின் முதற் பிரஜை முதல் சகல பிர­சை­களும் வணங்­கு­கின்ற தேவா­லயம் இது­வாகும். இத்­தே­வா­லயம் கொழும்பு கொச்­சிக்­க­டையில் அமைந்­தி­ருப்­பது நாம் செய்த பாக்­கி­ய­மாகும்.

ஒரு குறுகிய வாழ்நாளில் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து தனது செபத்தால் பல புதுமைகள் செய்த புனித அந்தோனியார் 36ஆவது வயதில் இறந்தார் எனப்படுகிறது.

1231ஆம் ஆண்டு  ஜுன் மாதம் 13ஆம் திகதி இறந்தார். அந்தோனியார் இறக்கும் போது கூட எனது இறைவனைக் காண்கிறேன் “ I see my Lord” என்று அருகில் இருந்தவர்களுக்குக் கூறிக்கொண்டே பாதுவாவுக்கு அருகில் உள்ள இடத்தில் இறந்தார்.

சட்­டத்­த­ரணி கே.ஜீ. ஜோன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right