இன்றைய திகதியில் இருபது வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் கூட முறையான வாழ்க்கை நடைமுறையை கடைப்பிடிக்காததால் இதய பாதிப்பு ஏற்படுவதுடன் மாரடைப்பும் ஏற்பட்டு, உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இந்த தருணத்தில் இதய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வைத்திய நிபுணர்கள் ஓஞ்சியோகிராம் அல்லது சி டி ஓஞ்சியோகிராம் என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்வார்கள். இந்தத் தருணத்தில் எம்மில் பலருக்கும் சி டி ஓஞ்சியோகிராம் பரிசோதனை அவசியமா? என்ற வினா எழும். இதற்கான விளக்கத்தை வைத்திய நிபுணர்கள் விவரிக்கிறார்கள்.
பொதுவாக இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு, இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் குறிப்பாக கொழுப்பு படிவுகள் சேகரமாகி அடைப்பு ஏற்பட்டிருந்தால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டமும் குறைய தொடங்கும். இதயத்தில் இருந்து செல்லும் ரத்த ஓட்டமும் குறைய தொடங்கும். இதனால் மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டு, உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்படக்கூடும். இந்த தருணத்தில் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிக்கு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க ஓஞ்சியோகிராம் அல்லது சிடி ஓஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளலாம் என வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள்.
ஓஞ்சியோகிராம் பரிசோதனையின் போது தொடை பகுதியிலிருந்து இதயத்திற்கு ஒரு மெல்லிய குழாயை உட்செலுத்தி பாதிப்பின் தன்மையை அதாவது ரத்த நாளத்தில் ஏற்பட்டிருக்கும் அடைப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இதனை அனைத்து நோயாளிகளுக்கும் மேற்கொள்ளலாம்.
சி டி ஓஞ்சியோகிராம் எனும் பரிசோதனையை மேற்கொள்ளும் போது கதிர்வீச்சு இருப்பதாலும், அதில் பாதிப்பினை கண்டறிவதற்காக பிரத்யேக திரவத்தை செலுத்துவதாலும் இத்தகைய பரிசோதனையை அனைவருக்கும் பரிந்துரைக்க இயலாது. பாதிப்பின் தன்மை,வயது,ஆரோக்கியம், என சில அம்சங்களை அவதானித்த பிறகு தான் அவர்களுக்கு சிடி ஓஞ்சியோகிராம் பரிசோதனையை மேற்கொள்ள வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள்.
ஆனால் சி டி ஓஞ்சியோகிராம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கும். இதில் ரத்த நாள அடைப்பின் நீளம், அகலம், கொழுப்பு படிவத்தின் அடர்த்தி , குருதி ஓட்டத்தின் தன்மை என பல்வேறு விடயங்களை துல்லியமாக அவதானிக்கலாம்.
வைத்தியர் முரளிதரன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM