புலன் இயக்க பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும் புலன் தூண்டுதலுக்கான நவீன சிகிச்சை

Published By: Digital Desk 2

25 Feb, 2025 | 06:33 PM
image

இன்றைய சூழலில் ஆட்டிசம் எனப்படும்   புலன் இயக்க குறைபாட்டுடன் குழந்தைகள் பிறக்கிறார்கள். இவர்களுக்கு தற்போது சென்சரி ஸ்டிமுலேஷன் தெரபி எனப்படும் புலன் இயக்க தூண்டுதலுக்கான நவீன சிகிச்சை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக இத்துறை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்றைய சூழலில் பிறக்கும் போதே குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு ஏற்படும் பிறவி குறைபாட்டிற்கான அறிகுறியை விரைவாக கண்டறிந்து, அவர்களுக்கு முறையான சிகிச்சையை வழங்கினால் இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்களால் மற்ற ஆரோக்கியமான பிள்ளைகளைப் போல் வளரவும், வாழவும் இயலும். ஆனால் சில பிள்ளைகள் பார்த்தல், தொடுதல், கேட்டல், நறுமணத்தை முகர்தல், சுவையை உணர்தல் உள்ளிட்ட பல்வேறு புலன் சார்ந்த செயலாக்கங்களில் பாரிய பின்னடைவுடன் பிறக்கிறார்கள். இவர்களுக்கு தற்போது மசாஜ் , இசை மூலமாக சிகிச்சை உள்ளிட்ட நவீன சிகிச்சை முறைகள் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

பார்வை, செவிப்புலன், நறுமணம், சுவை, தொடுதல், கூட்டு புலன் உணர்வு, சமநிலை இயக்கம் உள்ளிட்ட புலன் சார்ந்த விடயங்களில் பிள்ளைகளுக்கு குறைபாடுகள் இருந்தால் அதனை துல்லியமாக அவதானித்து அதற்கென பிரத்யேக சிகிச்சை நிபுணர்களிடம் தொடர்ச்சியாக நிவாரண சிகிச்சையை பெற்றால் அவர்களால் ஏனைய இயல்பான குழந்தையைப் போல் வளர முடியும். ஸ்பீச் தெரபி, ஆக்குபேஷனல் தெரபி என பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தாலும் தற்போது சென்சரி ஸ்டிமுலேஷன் தெரபி என்னும் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் புலன் தூண்டப்பட்டு நிவாரணம் கிடைக்கிறது. அதாவது கேட்பது , தொடுவது,  பார்ப்பது,  முகர்வது , உள்ளிட்ட பல்வேறு புலன்களை இத்தகைய நவீன சிகிச்சை மூலம் அவர்களிடத்தில் தூண்டலாம். இந்த சிகிச்சையில் உள்ள நகரும் விளக்குகள் , புகைப்படங்கள் அனைத்தும் அவர்களுக்கு நிவாரணத்தை விரிவாக வழங்க உதவுகிறது.

மேலும் இத்தகைய சிகிச்சை தொடர்ந்து வழங்கப்படும் போது புலன் செயலாக்க கோளாறுகளை சீரமைக்க உதவுகிறது. அத்துடன் புலன்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் இத்தகைய தூண்டுதல் சிகிச்சை வழி வகுக்குகிறது. இத்தகைய சிகிச்சை தொடரும்போது பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நரம்பு மண்டலம் அவர்களின் சுழலுக்கு ஏற்ப ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் எதிர்வினை ஆற்றுகிறது. மேலும் மூளையின் உணர்வு தூண்டுதல்களை செயலாக்குவதற்கும் ஆக்கப்பூர்வமான முறையில் உதவி செய்கிறது. இதனால் இத்தகைய சிகிச்சைக்கு தற்போது வரவேற்பு அதிகரித்திருக்கிறது. 

வைத்தியர் அஸ்வினி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15