கடலோரச் சுற்றாடல் அமைப்புகளில் உள்ளடங்கும் பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள், வாவிகள் மற்றும் கழிமுகங்கள் அவற்றின் வளமான பல்வகை உயிரின பிரசன்னத்தினால் மகத்தான சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார மதிப்பைக் கொண்டுள்ளன.
அவை அனைத்திலும், பவளப்பாறைகள் குறிப்பாகத் தனித்துவமான இடத்தை வகிக்கின்றன. எனினும், உலகளாவிய சுற்றாடல் நிலைமை மாற்றங்கள், மாசடைதல், மனித செயற்பாடுகள் மற்றும் சில வகை மீன் இனங்கள் மிதமிஞ்சிய அளவில் பிடிக்கப்படுமல் போன்ற காரணங்களினால், இச் சுற்றுச்சூழல் அமைப்பு பெரிதும் நாசமாக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, பரம்பரை பரம்பரையாக இந்த மூலவளங்களில் தங்கியிருந்த சமூகங்களுக்கு கணிசமான சுற்றாடல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, அலங்கார மீன் வகைகளைப் பிடிப்பதிலும் விற்பதிலும் ஈடுபட்டுள்ள குழுவினர் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயங்களைக் கருத்திற்கு எடுத்துக்கொண்ட எல்.பீ. ஃபினான்ஸ், கடல் சார்ந்த பல்வகை உயிரின அமைப்பை மீட்டுக்கொள்ளுதல், உள்ர் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், நீண்டகால அடிப்படையிவ் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பேணி வளர்த்தல் ஆகிய நோக்கங்களுடன் பேண்தகு தன்மையுள்ள ஒரு செயற்றிட்டத்தை விருத்தி செய்யும் பொருட்டு தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்துடன் (NARA) தொடர்புகொண்டது.
இதன் பிரகாரம், இந்த வேலைத்திட்டத்தின் கீழ் வர்ண மீனினங்களுக்குச் செயற்கை வாழிடங்களை உருவாக்குவதன் மூலமும் பவளப்பாறைகளைச் செய்கை பண்ணுவதன் மூலமும் தேவேந்திரமுனை கரையோரப் பகுதியில் பல்வகை உயிரினத் தொகுதியை மேம்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வர்ண மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதி மீன்பிடி நடவடிக்கைகளிலிருந்து விடுபட்டதாக இருக்கும். இப் பகுதிக்கு வெளியே பிடிக்கப்படும் மீன்களை ஏற்றுமதி செய்ய முடியும். மேலும், ளுழெசமநடiபெ சுழியோடல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் வெளிநாட்டுப் பயணிகளை கவர்வதன் மூலம் இந்த வேலைத்திட்டம் இப் பிரதேசத்தில் பேண்தகு தன்மையான சுற்றுலாத் துறையை விருத்தி செய்வதற்கும் உதவும். சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் உள்;ர்வாசிகளின் வாழ்க்கைத் தரமும் முன்னேறும்.
இந்த வேலைத்திட்டத்திற்கு எல்.பீ. ஃபினான்ஸ் நிதியுதவி வழங்கும் அதே சமயத்தில், வேலைத்திட்டத்தின் அமுலாக்கத்திற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதலை NARA வழங்குகின்றது. அத்துடன், இப் பிரதேசத்தின் முகாமைத்துவமும் பாதுகாப்பும், சமூக அடிப்படையிலான முகாமைத்துவ நடைமுறைகளைப் பயன்படுத்தி, மீன்பிடித் திணைக்களத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும்.
இம் முன்முயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி Nயுசுயு நிலையத்தில் கைச்சாத்திடப்பட்டது. NARA அமைப்பின் தலைவர் பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சி, எல்.பீ. ஃபினான்ஸின் வியாபார அபிவிருத்தி சிரேஷ்ட முகாமையாளர் சமீர வன்னிநாயக்க ஆகியோர் இதில் கையொப்பமிட்டனர். இம் முன்முயற்சி தொடர்பில், எல்.பீ. ஃபினான்ஸ் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் நிரோஷன் உடகே அவர்களுக்கு விசேட நன்றிகள் உரித்தாகும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM