அரசாங்கத்தின் ஒதுக்கீட்டில் பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் வீடுகளைக்கூட நிர்மாணிக்க முடியாது - சுஜித் எம்.பி

Published By: Digital Desk 2

22 Feb, 2025 | 05:58 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் பெருந்தோட்ட மக்களின் வீட்டுத்திட்டத்துக்கு ஒதுக்கியுள்ள பணத்தில்  ஆயிரம் வீடுகளைக்கூட அமைக்க முடியாது. அதனால் அரசாங்கம் அந்த மக்களுக்கு வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நினைத்தால் 7பேர்ச் காணியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர் சுஜித் சன்ஜே பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

அரச ஊழியர்களுக்கு உணரக்கூடிய வகையில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்றே ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.ஆனால் தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் சம்பள அதிகரிப்பு எவ்வளவு என்பதை அரச தரப்பினருக்கே தெளிவில்லாமல் இருக்கிறது. 

எங்களுக்கும் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறது. ஆனால் எனக்கு விளங்கியதன் பிரகாரம் 5070 ரூபா அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசாங்கம் தெரிவித்திருக்கும் 15ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொள்ள 2027ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

அத்துடன் வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும்தொகை 2200 பில்லியன் ரூபாவாகும். அரசாங்கம் தெரிவித்திருக்கும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதாக இருந்தால், துண்டு விழும்தொகையை பெற்றுக்கொள்ள வெளிநாடுகளில் இருந்து கடன் பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வரி அதிகரிப்பு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு திட்டங்கள் எதுவும் இல்லை.

அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக வழங்க பரிந்துரைப்பதாக ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 2ஆயிரம் ரூபாவாக அதிகரித்து பெற்றுக்கொடுப்பதாகவே இவர்களின் கொள்கை பிரகடனத்தி்ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

ரணில் விக்ரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்னரே இந்த 1700 ரூபாவை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு அதனை செய்ய முடியவில்லை. அவரின் இறுதி கால கட்டத்திலேயே கம்பனிகளுடன் கலந்துரையாடி 1350 ரூாப சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

மேலும் மலையக மக்களின் வீட்டு திட்டத்திற்கு 4ஆயிரம் மில்லியன் ரூபாவே அரசாங்கம் ஒதுக்கி இருக்கிறது. அரசாங்கம் ஒதுக்கி இருக்கும் இந்த நிதியில் இந்த வருத்தில் ஆயிரம் வீடுகளைக்கூட நிர்மாணித்துக்கொடுக்க முடியாது. 

அதனால் மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றால், எமது அரசாங்கம் அந்த மக்களுக்கு 7பேர்ச் காணி கொடுத்ததுபோல்  அரசாங்கம்  தோட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களுக்கு தேவையான வீட்டை நிர்மாணித்துக்கொள்வார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப்...

2025-04-22 01:51:07
news-image

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க...

2025-04-21 23:18:09
news-image

உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

2025-04-21 23:10:54
news-image

அரசாங்கத்தின் பொய் நாடகங்களுக்கு இனியும் மக்கள் ...

2025-04-21 19:57:04
news-image

மட்டு. சங்குலா குளத்தை தனிநபர்கள் சேதப்படுத்தியதால்,...

2025-04-21 22:15:04
news-image

பொருளாதார நெருக்கடி குறித்து நிதி அமைச்சர்...

2025-04-21 15:48:26
news-image

வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும்...

2025-04-21 19:54:29
news-image

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் மறைவுக்கு...

2025-04-21 20:07:44
news-image

பளை நீர் விநியோகத் திட்டங்களை பார்வையிட்ட...

2025-04-21 19:48:28
news-image

சட்டவிரோத கடற்றொழிலை தடைசெய்ய முன்னின்றவரின் மோட்டார்...

2025-04-21 19:44:36
news-image

திருகோணமலையில் கடந்த கால ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்ட...

2025-04-21 20:11:44
news-image

கிழக்கில்  அதிக வெப்பம் ! -...

2025-04-21 20:01:33