இன்றைய திகதியில் எம்மில் பலரும் நாளாந்தம் எட்டு மணி தியாலம் வரை உறங்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையை கடைப்பிடிப்பதில்லை. எம்மில் பலரும் ஆறு மணி தியாலத்திற்கும் குறைவாகவே உறங்கி, தூக்கம் தொடர்பான கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு தற்போது அக்டிகிராபி மற்றும் பொலிசோம்னோகிராபி என நவீன பரிசோதனைகள் மூலம் தூக்கம் தொடர்பான கோளாறுகளை ஆய்வு செய்து, அதற்குரிய சிகிச்சையை பரிந்துரைக்கிறார்கள்.
எம்முடைய வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை நாம் தூக்கத்திற்காக செலவிடுகிறோம். நாளாந்தம் மக்கள் மேற்கொள்ளும் இந்த செலவு அவர்களுடைய ஆயுள் முழுவதும் ஆரோக்கியத்திற்கான முதலீடு என தெரிந்து கொள்வதில்லை. தூக்கத்தை குறைத்துக் கொள்வதால் உடல்நலம் தொடர்பான பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. அத்துடன் நாளாந்தம் ஆறரை மணி தியாலம் வரை ஆழ்நிலை உறக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் பரிந்துரை செய்கிறார்கள் ஏனெனில் ஆழ்நிலை உறக்கத்தின் போது எம்முடைய நரம்பு மண்டலம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் அன்றைய திகதியில் சேரும் கழிவுகளை நீக்கி, தங்களை புதுப்பித்துக் கொள்வதாக வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
அதே தருணத்தில் கண் அசைவு மற்றும் கண் சார்ந்த செயல்பாட்டிற்கு உறக்கம் இன்றியமையாதது என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். உங்களுடைய உறக்கத்தின் போது மூளைப் பகுதியிலிருந்து குருதிக்கு செல்லும் ஓக்சிஜனின் அளவு, இதயத்துடிப்பு, சுவாசம், கண், கால் அசைவுகள் ஆகியவற்றை குறித்து அறிந்து கொள்வதற்காக வைத்திய நிபுணர்கள் தற்போது அக்டிகிராபி அல்லது பொலிசோம்னோகிராபி எனும் உறக்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்கிறார்கள்.
இத்தகைய ஆய்வின் மூலம் நீங்கள் உங்களுடைய உடல் கோரும் உறக்கத்திற்கும் , நாளாந்தம் நீங்கள் மேற்கொள்ளும் உறக்கத்திற்கும் இடையேயான வேறுபாட்டை கண்டறிய படுகிறது. தூக்க கோளாறுகளால் உங்களுடைய உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் குறிப்பாக இதயத்துடிப்பு ,கண் அசைவு, ரத்த நாளங்களில் ஓக்சிஜனுடன் கலந்த குருதி ஓட்டம் ஆகியவற்றை பற்றி துல்லியமாக ஆராய்ந்து அதற்கேற்ற தீர்வினை வைத்தியர்கள் மேற்கொள்கிறார்கள்.
வைத்தியர் ராமகிருஷ்ணன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM