“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் கைது

19 Feb, 2025 | 09:59 PM
image

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் புத்தளம் பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவர் உயிரிழந்துள்ளார். 

சட்டத்தரணி வேடத்தில் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குச் சென்ற துப்பாக்கிதாரி ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பிரதான சந்தேக நபர் புத்தளம் பிரதேசத்தில் வைத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய மொஹமட் அஸ்லம் செரீப்டீன் எனப்படும் முன்னாள் கொமாண்டோ படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் ஏற்கனவே 5 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது குறித்த சந்தேக நபருக்கு ஒரு பெண்ணுடன் தொடர்புள்ளமை சி.சி.ரி.வி. காணொளியில் புலப்பட்டுள்ளது. அந்த பெண்ணை கைதுசெய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

கைதுசெய்யப்பட்ட நபர் பல பெயர்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.  இவர் பல ஆள் அடையாள அட்டைகளை வைத்திருந்துள்ளார். சட்டத்தரணியென தன்மை அடையாளப்படுத்த சட்டத்தரணிகளுக்கான அடையாள அட்டையையும் வைத்திருந்துள்ளார்.

அந்தவகையில் குறித்த சந்தேக நபர் மொஹம்மட் அஸ்லம் செரீப்டீன் என்ற பெயரிலும் பின்னர் சமிந்து டில்சான் பியூமங்க கந்தனாராச்சி என்ற பெயரிலும் ஆள் அடையாள அட்டைகளை வைத்திருந்துள்ளார்.

சட்டத்தரணிகளுக்கான அடையாள அட்டையில் கொடிகாரகே கசுன் பிரபாத் நிஷங்க என்ற பெயரில் காணப்படுகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம்...

2025-03-21 12:18:42
news-image

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு...

2025-03-21 11:53:19
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு -  6...

2025-03-21 12:08:17
news-image

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் !

2025-03-21 11:51:15
news-image

வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து :...

2025-03-21 11:31:24
news-image

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் ஆஜராகாது இருந்தால்...

2025-03-21 11:13:13
news-image

மாத்தளையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 95...

2025-03-21 11:01:18
news-image

தலவாக்கலை மிடில்டன் பஸார் மதுபானசாலை அருகில்...

2025-03-21 10:47:00
news-image

முக்கிய உள்ளூராட்சிமன்றங்களில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு

2025-03-21 10:49:14
news-image

பரீட்சார்த்த வேலையை மீண்டும் செய்தால் நாட்டுக்கு...

2025-03-21 10:45:19
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் எமது...

2025-03-21 09:54:11
news-image

அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள்...

2025-03-21 09:52:35