நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ; நீதிமன்றில் நீதிபதிகளுக்கும், சட்டத்தரணிகளுக்கும் பாதுகாப்பில்லை - தயாசிறி

Published By: Digital Desk 7

19 Feb, 2025 | 02:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள்  சட்டத்தரணி வேடமணிந்து  துப்பாக்கிதாரி சாட்சிக்கூண்டில் இருந்த சந்தேகநபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.நீதிமன்றத்தில்  நீதிபதிகளினதும், சட்டத்தரணிகளினதும் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. இது பாரதூரமானது. இவ்விடயம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற அமர்வின் போது  விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் உரையாற்றியதாவது,

கொழும்பு புதுக்கடை  நீதிமன்றத்துக்குள் இன்று புதன்கிழமை (19)  துப்பாக்கிதாரி  ஒருவர்  சட்டத்தரணியை போன்று வேடமணிந்து நீதிபதிகள் முன்னிலையில் சாட்சிக் கூண்டில் இருந்த சந்தேக நபர் மீது துப்பாக்கி  சூட்டினை  மேற்கொண்டுள்ளார்.

இது பாரதூரமானதொரு பிரச்சினையாகும். நேற்று இரவு செவ்வாய்க்கிழமை (18)  ஒரு  குடும்பத்தார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.நீதிபதிகள் எவ்வாறு சுதந்திரமாக செயற்பட முடியும்.இதனை அலட்சியப்படுத்த முடியாது.

இவ்வாறான  செயற்பாடுகளினால் நீதிமன்றத்தில் நீதிபதிகளினதும், சட்டத்தரணிகளினதும் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை.பதில் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் ஜனாதிபதி சிறந்த முறையில் பேசுகிறார்.ஆனால் கடந்த ஓரிரு மாதங்களில் மாத்திரம் 78  பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலைகள் குறித்து அரசாங்கம் கடுமையான முறையில் அவதானம் செலுத்த வேண்டும். இல்லாவிடின் இது  எங்கு செல்லும் என்பது எமக்கு தெரியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25