பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தான் மாநிலத்தில் இனம்தெரியாத நபர்கள் பேருந்து பயணிகளை வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்றுள்ளனர்
லாகூருரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தினை இடைமறித்த ஆயுததாரிகள் அதிலிருந்தவர்களை இறங்கச்செய்து படுகொலை செய்துள்ளனர்.
பலோச்சிஸ்தானின் பார்க்கான் என்ற பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த பகுதி ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் ஆப்கான் பாக்கிஸ்தான் எல்லைகளிற்கு அருகில் உள்ள இந்த பகுதியில் அதிகளவு சுயாட்சியை கோரி ஆயுதப்போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பயணிகளை வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்றனர் என சடாட் ஹ_சைன் என்ற அதிகாரியொருவர் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளார்.
பயணிகளிடம் அவர்களின் அடையாள அட்டையை பெற்ற பின்னர் பஞ்சாபை சேர்ந்தவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய பின்னர் அவர்களை சுட்டுக்கொன்றனர் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM