கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற ரயில் மோதி ஒருவர் பலி!

Published By: Digital Desk 7

19 Feb, 2025 | 10:29 AM
image

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற ரயில் மோதி பலத்த காயங்களுக்குள்ளான நபர் ஒருவரை சிகிச்சைக்காக  வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புத்தேகம பொலிஸ் பிரிவின் தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இன்று புதன்கிழமை (19)  அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் 65 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன், அவர் பற்றிய வேறு எந்த தகவல்களும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38