கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற ரயில் மோதி பலத்த காயங்களுக்குள்ளான நபர் ஒருவரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புத்தேகம பொலிஸ் பிரிவின் தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இன்று புதன்கிழமை (19) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் 65 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன், அவர் பற்றிய வேறு எந்த தகவல்களும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM