பிலியந்தலை துப்பாக்கிச்சூடு : நிதியுதவி செய்த இருவர் கைது

Published By: Priyatharshan

08 Jun, 2017 | 09:29 AM
image

பிலியந்தலையில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவத்திற்கு நிதியுதவி வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 34 வயதுடையவர்களெனவும் தர்கா நகரில் வைத்தே குறித்த இருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிலியந்தலையில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி போதைப்பொருள் சுற்றிவளைப்­பொன்­றுக்குச் சென்ற பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீவ தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் உட்பட இருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயமடைந்திருந்தனர். 

இதேவேளை, இச் சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் ஏற்கனவே பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16