பிலியந்தலையில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவத்திற்கு நிதியுதவி வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 34 வயதுடையவர்களெனவும் தர்கா நகரில் வைத்தே குறித்த இருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பிலியந்தலையில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றுக்குச் சென்ற பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயமடைந்திருந்தனர்.
இதேவேளை, இச் சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் ஏற்கனவே பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM