சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பான உறவுகளின் அடிப்படையிலும், உலகம் முழுவதிலும் உள்ள குறைந்த வருமானம் பெரும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்க சவூதி அரேபியா அரசு மேற்கொள்ளும் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையிலும், மற்றும் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம், இலங்கையில் மேற்கொள்ளும் மனிதாபிமானப் பணிகளின் தொடராக, இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள காத்தான்குடி அரச வைத்தியசாலையில் கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் தன்னார்வத் திட்டம் ஒன்றை இம்மாதம் 10 திகதி முதல் 16 திகதி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இது போன்றதொரு தன்னார்வத் திட்டத்தை மன்னர் சல்மான் நிவாரண மையம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திகதி 11 முதல் 16 திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள காத்தான்குடி பிரதேசத்தில் மேற்கொண்டது.
இத்திட்டத்தினூடாக பல ஆயிரக்கணக்கான நோயாளர்களைப் பரிசோதித்தல், அவர்களுக்கு வைத்திய சேவைகளை வழங்குவதோடு தேவைப்படுமிடத்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளல், தேவையான மருந்துகளை வழங்குதல், வெண்படலங்களை அகற்றுதல், கண்ணீர் குழாய்களில் ஏற்படும் தடுப்புகளுக்கு சிகிச்சையளித்தல், நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை மருந்து வகைகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றை வழங்குதல் என்பன இடம்பெறும்.
இத்திட்டத்தின் ஊடாக பின்வரும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
- வைத்திய பரிசோதனைகள் ;4,484
- கண்ணாடி விநியோகம் ;974
- அறுவை சிகிச்சைகள் ;478
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM