(செ.சுபதர்ஷனி)
ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை (18) வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகைத் தந்திருந்த பெருமளவான நோயாளர்கள் அசௌகரியத்திற்கு முகம் கொடுக்க நேர்ந்ததுடன், சிகிச்சைக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஹோமாகம வைத்தியசாலையின் நிர்வாக சீர்குலைவு காரணமாக வைத்திய சேவையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, மருத்துவ கண்காணிப்பாளரின் செயற்பாடுகளுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை ஹோமாகம ஆரம்ப வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
ஹோமாகம வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையின் மருத்துவ கண்காணிப்பாளரின் கடுமையான நிர்வாகத்தினால் வைத்திய சேவைகள் சீர்குலைந்துள்ளதாக அம்மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குறித்த வைத்தியரின் செயற்பாடுகளுக்கு எதிராக அவ்வைத்தியசாலையின் அனைத்து வைத்தியர்களும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த சிகிச்சைப் பிரிவுக்கு வருகைத் தந்திருந்த பெருமளவான நோயாளர்கள் கடும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்ததுடன் வைத்திய பரிசோதனைக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது.
மேற்படி தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் நிர்வாகத்தினருக்கும் வைத்தியர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.
தற்போது வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள வைத்தியருக்கு அரசியல் ஆதரவு உள்ளமையால் வைத்தியசாலையினுள் தனது அதிகாரத்தை பிரயோகித்து வருவதாக ஹோமாகம வைத்தியசாலையின் வைத்தியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் வைத்தியசாலையின் மருத்துவ கண்காணிப்பாளரின் செயற்பாடுகளினால் நோயாளர் பராமரிப்பு மற்றும் வைத்திய சேவையை வழங்குவதிலும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த வாரம் முழுவதும் வைத்தியசாலையில் நிலவிவந்த நிர்வாக பிரச்சினைக்கு பிராந்திய சுகாதார பணிப்பாளரின் தலையீட்டுடன் தீர்வு காண முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.
இதேவேளை மாரவில வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த வைத்தியர் அரசாங்கத்தின் உயர் அதிகாரியின் ஆதரவுடன் ஹோமாகம வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று வந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM