அநுராதபுரம், கிரானேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோரளயாகம மற்றும் உல்பத்தயாய ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஆறு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் திங்கட்கிழமை (17) பிற்பகல் கிரானேகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிரானேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஒரு வெளிநாட்டுத் துப்பாக்கியும் ஐந்து உள்நாட்டுத் துப்பாக்கிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 49 மற்றும் 51 வயதுடைய தேவஹுவ மற்றும் தம்புளுஹல்மில்லவெவ ஆகிய பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரானேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் கெக்கிராவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM