இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் சீதா ரஞ்சனியின் மறைவுக்கு ஊடக ஊழியர்கள் தொழிற்சங்க பேரவை இரங்கல் தெரிவித்துள்ளது.
ஊடக ஊழியர்கள் தொழிற்சங்க பேரவை இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மூத்த ஊடகவியலாளர் மற்றும் ஊடக சுதந்திர போராட்ட செயற்பாட்டாளர் சீதா ரஞ்சனியின் மறைவுக்கு ஊடக தொழிற்சங்க பேரவை தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கிறது.
பல தசாப்தங்களாக துடிப்புடன் ஊடக சுதந்திரத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய அவரின் இழப்பு ’ஊடக உலகத்திற்கும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைவருக்கும் பேரிழப்பாகும்.
பெண்கள் உரிமைகளுக்கும், தமிழர் பிரச்சினைக்கும் ஆற்றிய நிலையான பங்களிப்பு
சீதா ரஞ்சனி ஊடகத்துறையின் முன்னணி செயற்பாட்டாளராகவும், ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக வலுவான குரலாகவும் இருந்தார். இலங்கையில் ஊடகச் செயல்பாட்டில் மிகச் சிரமமான காலகட்டங்களில் கூட அவர் ஊடகவியலாளர்கள் பாதுகாப்புக்காக போராடி உரிமைகளுக்காக முன்னின்றார்.
நெருக்கடிகளுக்கு மத்தியில் ஊடக சுதந்திர போராளியாக உயிர்நீத்தவர்
1954 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி அநுராதபுரத்தில் பெரிமியங்குளத்தில் பிறந்த சீதா ரஞ்சனி ஆறு பிள்ளைகளில் மூத்தவராக விளங்கினார். தனது வாழ்நாளை எழுதுதலுக்கும், செயற்பாடுகளுக்கும், ஊடகச் சுதந்திரத்தை முன்வைப்பதற்கும் அர்ப்பணித்தவர். “யுக்திய” பத்திரகையின் ஊகவியலாளராக இருந்த அவர், தைரியமாக செய்திகளை வழங்கி பெருமை பெற்றிருந்தார். மிரட்டல்கள், தாக்குதல்கள் ஆகிய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அவர் ஊடக சுதந்திரத்திற்காக நிலைத்த நிலைப்பாட்டினை எடுத்தார்.
கவிஞராகவும், இலக்கிய விமர்சகராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் ஊடகத்துறை மட்டுமல்லாது இலக்கியம், திரைப்பட விமர்சனம், பெண்ணியம் கொள்கைகள் போன்ற பல துறைகளிலும் சீதா ரஞ்சனி தொண்டாற்றியுள்ளார். பெண்களின் உரிமை, சமத்துவம், சமூக நீதிக்காவும் தனது குரலை ஒலிக்கவிட்டவர். இலங்கையின் தமிழர் பிரச்சினைக்கு வெளிப்படையாக ஆதரவாக இருந்த அவர், சமூகவியல் போராட்டங்களிலும் துணிச்சலான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.
அவரின் மரணம் ஒருபோதும் மாற்ற முடியாத இழப்பு
இலங்கையின் ஊடக சமூகத்திற்கும், ஊடகச் சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்தைப் பேண நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அவரது மறைவு ஒரு பேரிழப்பு. ஆனால் அவர் நம்பிய கருத்துக்கள், அவர் வழங்கிய பங்களிப்புகள் எதிர்கால ஊடகவியலாளர்களுக்கும் சமூக செயற்பாட்டாளருக்கும் தொடர்ந்தும் வழிகாட்டியாக இருக்கும்.
ஊடக ஊழியர்கள் தொழிங்சங்க பேரவை அவரது நினைவுக்கு மரியாதை செலுத்துகிறது. அவரது வாழ்வின் இலட்சியங்களுக்காகவும், அவர் முன்னெடுத்த போராட்டங்களை முன்னெடுத்து செல்லும் பொறுப்பை நாங்கள் ஏற்கிறோம். அவரின் குரல் மௌனமானாலும், அவர் நம்பிய மதிப்புகள் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM