கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது துப்பாக்கியுடன் காணாமல்போயிருந்த நிலையில் கடந்த 08 ஆம் திகதி துபாய்க்கு தப்பிச் சென்றிருந்தார்.
இந்நிலையில், காணாமல்போன துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கே. புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து, துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கியும் 30 தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று செவ்வாய்க்கிழமை (18) நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM