மதுசார பாவனை, புகைப்பிடித்தலால் நாட்டில் ஆண்டுதோறும் 15 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவு! - ADIC நிறுவனம் தகவல்

18 Feb, 2025 | 03:08 PM
image

தொற்றா நோய்கள் ஏற்பட மதுசார பாவனை மற்றும் புகைப்பிடித்தலும் காரணிகளாக இணங்காணப்பட்டுள்ளன. இதனால் ஆண்டுதோறும் 2.6 மில்லியன் மரணங்கள் உலகளவில்  ஏற்படுகின்றன. வருடாந்தம் ஏற்படும் இறப்புக்களில் 4.7 வீத இறப்புக்கள் மதுசார பாவனையினால் ஏற்படுகின்றன. இலங்கையில் வருடாந்தம் சுமார் 15,000 மரணங்கள் மதுசார பாவனை மற்றும் புகைத்தலினால் ஏற்படுகின்றன என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் மேலும் குறிப்பிடுகையில்,

தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான நான்கு முதன்மை காரணிகளுள் மதுசார பாவனை மற்றும் புகைத்தல் ஆகியன இரு முதன்மைக் காரணிகளாக இணங்காணப்பட்டுள்ளன. இதனால் வருடாந்தம் சர்வதேச ரீதியாக 2.6 மில்லியன் மரணங்கள் ஏற்படுகின்றன. வருடாந்தம் ஏற்படும் இறப்புக்களில் 4.7 வீதமான இறப்புக்கள் மதுசார பாவனையினால் ஏற்படுகின்றன. 

இலங்கையில் வருடாந்தம் சுமார் 15000 அகால மரணங்கள் ஏற்படுகின்றன. மேலும், மதுசார பாவனையினால் பல்வேறு சமூக சீர்கேடுகள் ஏற்படுவதோடு, மதுசார பாவனை மற்றும் புகைத்தலை காரணமாகக் கொண்டு பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மதுசார பாவனையினால் பல குடும்பங்கள் பாரிய பொருளாதார இன்னல்களுக்கு ஆளாகின்றன. 

2022ஆம் ஆண்டு கணக்கெடுப்புக்களின் படி, மதுசாரம் மற்றும் புகைத்தல் பாவனைக்காக தினமும் 1210 மில்லியன் ரூபாவை எமது நாட்டு மக்கள் செலவழிக்கின்றமை தெரிய வந்துள்ளது.

2023ஆம் ஆண்டு தரவுகளின்படி, நாட்டுக்கு கிடைக்கப்பெறும் மொத்த வரி வருமானத்தில் மதுசாரம் மற்றும் சிகரட் நிறுவனம் செலுத்தும் வரிப்பணமானது 10 வீதமான பங்களிப்பை மாத்திரமே வழங்குகிறது. ஏனைய 90 வீதமான பங்களிப்பு ஏனைய வருமானங்களிலிருந்தே பெறப்படுகிறது. 

10 வீதமான வரிப் பங்களிப்பை மதுசாரம், சிகரட் நிறுவனங்கள் வழங்கினால் இவற்றை பாவனை செய்வதால் பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கம் வரிப்பணத்தை விடவும் அதிகமான தொகை செலவிட நேரிட்டுள்ளது.

குறிப்பாக மதுசார பாவனையினால் ஏற்படும் பொருளாதாரம் மற்றும் சுகாதார செலவீனங்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 237 பில்லியன் ரூபா  லெவழித்திருக்கிறது. 

ஆனால், அதே ஆண்டு மதுசாரத்தினால் கிடைக்கப்பெற்ற வரி வருமானம் அச்செலவீனத்தை விடவும் குறைவான தொகை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, மதுசாரத்தினால் அரசாங்கத்துக்கு அதிகளவு வரிப்பணம் கிடைக்கிறது என்கின்ற சமூகமயமாக்கப்பட்டுள்ள கருத்து ஒரு பொய்யான கருத்து என்பதை நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

மதுசார பிரச்சினையிலிருந்து விடுதலையாவதற்கு நாட்டினுள் ஏற்படவேண்டிய மாற்றங்கள்

1. விஞ்ஞான ரீதியான வரி சூத்திரத்தை அமுல்படுத்துவதன் மூலம் மதுசார பாவனையைக் குறைத்துக்கொள்ளவும் கலால் வரியை அதிகரித்துக்கொள்ளவும் முடியும்.

2. மதுசார நிறுவனங்களால் செலுத்தப்படாமலிருக்கும் வரிப் பணத்தை அறவிடுதல்

- கடந்த 2023ஆம் ஆண்டு மதுசாரத்துக்கான வரி 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவாக மதுசாரத்தினால் கிடைக்கப்பெற்ற வரி வருமானம் 11.6 வீதத்தால் அதிகரித்ததோடு மதுசார பாவனை 8.3 மில்லியன் லீற்றர்கள் குறைவடைந்துள்ளது. 

3. சுற்றுலாத் துறை எனும் போர்வையிலும் தற்காலிகமாகவும் வழங்கப்படும் மதுசாரசாலை அனுமதிப்பத்திரங்களை அனுமதிக்காதிருத்தல்.

4. 2016ஆம் ஆண்டு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்ட மதுசாரக் கட்டுப்பாடு தொடர்பான தேசிய கொள்கையை பிரகடனப்படுத்தல்.

5. சட்ட ரீதியற்ற மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தாராளத்தன்மையை குறைப்பதற்கு பிரதேச மட்டங்களில் கொள்கைகளை அமுல்படுத்தும் நிறுவனங்களின் பெறுபேறுகளை ஆராய்ந்து பார்ப்பதற்கான வழிமுறையை நடைமுறைப்படுத்துதல்.

6. 2019ஆம் ஆண்டு தேசிய மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகார சபையினால் முன்மொழியப்பட்ட எனினும் பாராளுமன்றத்தினால் இன்னமும் அங்கீகரிக்கப்படாத திருத்தங்களுக்கு உடனடியாக பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுதல்.

- கல்வி நிறுவனங்கள் அல்லது வணக்கஸ்தலங்கள் ஆகியவை அமைந்துள்ள இடங்களிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் புகைப்பொருள் மற்றும் மதுசார விற்பனையை தடை செய்தல்.

- அனைத்து பொது இடங்களையும் புகைத்தல் மற்றும் மதுசார பாவனையிலிருந்து விடுதலையான பிரதேசமாக மாற்றுதல்.

- சமூக வலைத்தளம் மற்றும் அனைத்து ஊடகங்களில் இடம்பெறும் விளம்பரங்களை நிறுத்துவதற்கு தேவையான திருத்தங்களை அமுல்படுத்தல்

- இணையவழி விளம்பரங்களை நிறுத்துதல்

- தண்டப்பணத் தொகையை அதிகரித்தல் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தக்கூடிய அதிகாரிகளை அதிகரித்தல்.

7. இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை மையப்படுத்தி தொடர்த்தேர்ச்சியாக பயனுள்ள போதைப்பொருள் தடுப்பு செயறறிட்டங்களை அமுல்படுத்தல்.

8. தற்போது மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனைகளுக்கு ஆளாகியிருப்பவர்களை அவற்றிலிருந்து விடுதலையாக்குவதற்கு தேவையான செயற்றிட்டங்களை பரவலாக செயற்படுத்தல்.

9. புகையிலை அல்லது மதுசார நிறுவனங்களோடு தொடர்புடைய நபர்களுக்கு அரச நிறுவனங்களில் பதவிகளை வழங்காமலிருத்தல்.

10. 2024ஆம் ஆண்டு போதைப்பொருளை விரைவாக கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரரிந்துரைகளை அமுல்படுத்துதல்.

இவ்வாறு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45