மொரீசியஸ் நாட்டில் புதிதாகத் திறக்கப்பட்ட நவீன புற்றுநோய் மருத்துவமனையில் நடந்த முதல் அறுவைச் சிகிச்சையான நாக்கு புற்றுநோய் அறுவைச் சிகிச்சையை சென்னையைச் சேர்ந்த பாலாஜி பல் மற்றும் முகச்சிரமைப்பு மருத்துவமனையின் நிருவாக இயக்குநரும் உலகப்புகழ்பெற்ற முகச்சீரமைப்பு அறுவைச் சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் டாக்டர் எஸ்.எம். பாலாஜி செய்து முடித்தார்.
அந்த மருத்துவமனையை மொரீசியஸின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் குமார் பட்சு பெப்ரவரி 4 ஆம் திகதி திறந்துவைத்தார். அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துமுடித்த பேராசிரியர் பாலாஜியை மொரீசியஸ் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.
பிரதமருடனான சந்திப்பின்போது மொரீசியஸில் பல்,வாய் , முகம், மற்றும் கபால மறுசீரமைப்பு திட்டங்களை மேம்படுத்தியதற்காக அவருக்கு பேராசிரியர் பாலாஜி நன்றி தெரிவித்தார்.
மொரீசியஸின் விக்டோரியா மருத்துவமனையின் கௌரவ முகச்சீரமைப்பு அறுவைச் சிகிச்சை நிபுணராக பேராசிரியர் பாலாஜியை பிரதமர் ராம்கூலம் நியமித்த பிறகு கடந்த 13 வருடங்களாக அவர் அந்த நாட்டில் சேவையாற்றிவருகிறார்.
பேராசிரியர் பாலாஜி வருடத்துக்கு இரண்டு மூன்று தடவைகள் மொரீசியஸுக்குச் சென்று ஒவ்வொரு தடவையும் 12 முதல் 15 முகச்சீரமைப்பு அறுவைச் சிகிச்சைகள் வரை செய்து அரசின் சுகாதாரத்துறை மூலம் மொரிசியஸ் நாட்டு மக்களுக்கு வெற்றிகரமாகச் சேவை செய்துவருகிறார்.
லண்டனில் மருத்துவப் படிப்பை முடித்தவரான பிரதமர் ராம்கூலம் தனது நாட்டில் நவீன முறையிலான சிகிச்சைகளை அளிப்பதில் நேரிடும் சிக்கல்களையும் சவால்களையும் புரிந்து கொள்ளக்கூடியவர். மொரீசியஸ் நாட்டு மக்களுக்காக பேராசிரியர் பாலாஜி வழங்கிவரும் முகச்சீரமைப்பு அறுவைச் சிகிச்சைச் சேவையை பிரதமர் பாராட்டினார். முகச்சீரமைப்பு பற்றி தான் எழுதிய ' Clinical Craniomaxillofacial Surgery ' என்ற நூலை பேராசிரியர் பாலாஜி பிரதமர் ராம்கூலத்திடம் கையளித்ததாக பாலாஜி பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவமனை நிருவாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM