திருகோணமலையில் "பெண்கள் அரசியலில்" எனும் தலைப்பில் விழிப்புணர்வுக்கான வீதி நாடகம்..!

Published By: Digital Desk 2

17 Feb, 2025 | 05:34 PM
image

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மற்றும் தம்பலகாமம் பிரதேசங்களில் இலங்கை உள்ளூராட்சி மன்றம் நிறுவனத்தின் ஏற்பாட்டில், "பெண்கள் அரசியலில்" எனும் தலைப்பில் வீதி நாடகங்கள் வெள்ளிக்கிழமை (14) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (16) ஆம் திகதிகளில் சிறப்பாக நடத்தப்பட்டன.

இளைஞர்களின் பங்களிப்புடன், பெண்களின் அரசியல் பங்குபற்றலின் அவசியத்தை மக்களிடையே விளக்க இந்த நாடகங்கள் வடிவமைக்கப்பட்டன. பழமையான பாரம்பரியச் சிந்தனைகள், பாலினத்திற்கிடையேயான சவால்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்து சிந்திக்க தூண்டும் வகையில் இவ்வீதி நாடகங்கள் அமைந்திருந்தன.

நாடகம் நடைபெற்ற இடங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு நாடகங்களை கவனித்ததோடு, பெண்கள் அரசியலில் பங்கெடுப்பது குறித்து தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். 

இதேவேளை, பெண்கள் சமூகத்தில் முடிவெடுக்கும் அதிகார நிலையங்களில் பங்கேற்பதை உறுதிபடுத்த எதிர்காலத்திலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'நூறு மலர்கள் மலரட்டும்' : கோண்டாவில்...

2025-03-25 19:01:18
news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04