"சமாதானத்துக்கான பாதைகள்" செயற்றிட்டத்தால் ஆதரவளிக்கப்பட்ட பெண் தொழில்முனைவோரை சந்தித்தார் ஜப்பானிய தூதுவர்!

Published By: Digital Desk 2

17 Feb, 2025 | 10:33 AM
image

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரான அகியோ ஐசோமாட்டா "சமாதானத்துக்கான பாதைகள்" செயற்றிட்டத்தால் ஆதரவளிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரைச் சந்தித்தார்.

இந்த விஜயமானது ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு மற்றும் கிறிசாலிஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்ட வணிக மேம்பாடு மற்றும் தொழில்முனைவோருக்கான பயிற்சிகளின் தாக்கத்தை எடுத்துக்காட்டியது.

அனுராதபுரம், மட்டக்களப்பு, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களில் அமுல்படுத்தப்படும் இந்த முன்முயற்சியானது வணிகத் திட்டமிடல், நிதியியல் அறிவு மற்றும் உற்பத்தி மேம்பாடு ஆகியவற்றில் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலமாக 460க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோருக்கு வலுவூட்டியுள்ளது.

இந்த பயிற்சிகள் பங்கேற்பாளர்கள் தங்களது வணிக உத்திகளைச் செம்மைப்படுத்திக்கொள்ளவும் சந்தை அணுகல் மற்றும் தங்களது வணிகங்களை மேம்படுத்திக்கொள்ளவும் உதவியுள்ளன.

இந்த நிகழ்வில் தூதுவர் ஐசோமாட்டா பெண் தொழில்முனைவோரால் தயாரிக்கப்பட்ட பல்வேறு தயாரிப்புகளைப் பார்வையிட்டதுடன் அவர்களுடன் உரையாடி, அவர்களின் அனுபவங்கள் மற்றும் சாதனைகள் தொடர்பில் நேரடியாக அறிந்துகொண்டார்.

இதில் கலந்துகொண்ட தூதுவர் ஐசோமாட்டா கூறுகையில், 

"ஜப்பான் நலிவடைந்த சமுதாயங்களில் உள்ள பெண் தொழில்முனைவோர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முனைப்பாக ஆதரவளித்து வருகிறது.

இந்த செயற்றிட்டம் இயலளவு மேம்பாட்டை தாண்டி, பெண்கள் தலைமையிலான வணிகங்களைத் தக்கவைத்து, சமாதானத்தை நிலைநாட்டவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் உதவுகிறது. பொருளாதார ரீதியாக முனைப்பாக மாறுவதன் மூலமாக பெண்கள் தங்களது சமுதாயங்களில் தீர்மானம் எடுக்கும் மற்றும் தலைமைத்துவ வகிபாகங்களில் அதிக செல்வாக்கு பெறுவதுடன், நீடித்த மற்றும் உருமாற்றத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றார்.

ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் ஜப்பானின் நீண்டகால கூட்டாண்மையின் ஒரு பகுதியாக இந்த முன்முயற்சியானது பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களின் பொருளாதார மேம்பாடு குறித்த உறுதிப்பாடுகளை வலுப்படுத்தி, நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலுடன் இணங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25