நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நேற்று சனிக்கிழமை (15) ஐஸ் போதைப்பொருளுடன் 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேலியகொடை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் சோனையிட்டபோது, ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவரிடமிருந்து 05 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மற்றைய நபரிடமிருந்து 07 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு 15 , ஹங்வெல்ல பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 35 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கிராண்ட்பாஸ் மற்றும் கஜிமாவத்தை பகுதிகளில், 12 கிராம் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 06 கிராம் 700 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 29 வயதுடைய கிராண்ட்பாஸ் மற்றும் காஜிமாவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவார்.
அத்துடன், மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரலவெல்ல பகுதியில் 07 கிராம் 50 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவெல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவராவார்.
மேலும்,இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM