எஹெலியகொடையில் பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு!

Published By: Digital Desk 2

15 Feb, 2025 | 11:29 AM
image

இரத்தினபுரி, எஹெலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகடுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பேரனால் தாக்கப்பட்டு காயமடைந்த தாத்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  உயிரிழந்துள்ளதாக எஹெலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இரத்தினபுரி, பரகடுவ பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய முதியவர் ஆவார்.

உயிரிழந்தவர் தனது மகள் மற்றும் மருமகனுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளதுடன் மருமகனின் முதல் மனைவியின் மகனும் அவர்களுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று, மருமகனின் முதல் மனைவியின் மகன் வீட்டின் உரிமைக்காக உயிரிழந்த தாத்தாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறின் போது, பேரன் தாத்தாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த முதியவர் எஹெலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் சடலம் எஹலியகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைது செய்வது தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை...

2025-03-23 12:50:49
news-image

இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என தெரிவித்துக்கொண்டு...

2025-03-23 12:38:36
news-image

வெடிமருந்து, உள்நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது...

2025-03-23 12:44:52
news-image

வட கொழும்பு தொகுதி கொட்டாஞ்சேனை மேற்கில்...

2025-03-23 12:38:35
news-image

இலஞ்சம் பெற முயன்ற மூவர் கைது 

2025-03-23 11:58:21