தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு: பிரதிவாதியை ஆள்மாற்றம் செய்வது குறித்து ஆராய ஜுன் 4 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

Published By: Vishnu

15 Feb, 2025 | 01:44 AM
image

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கானது அதன் பிரதிவாதி ஒருவரை ஆள்மாற்றம் செய்வதற்கு இடமளிப்பதா என்பது குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் ஜுன் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஜுன் மாதம் 4 ஆம் திகதி எதிராளி ஒருவரை மாற்றுவது குறித்துத் தீர்மானிக்கப்பட்டதன் பின்னரே வழக்கு விசாரணை குறித்து ஆராயப்படும்.

இவ்வழக்கு வியாழக்கிழமை (13) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பயஸ் ரஸாக் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை இணக்கமாக முடிவுறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டது. இருப்பினும் வழக்கின் பிரதிவாதிகளான பா.உ சிறிதரன், பா.உ குகதாசன் மற்றும் முன்னாள் பா.உ யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் வழக்கை முடிவுறுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து கடும் தர்க்கம் இடம்பெற்றது.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கட்சியின் மத்திய குழுவில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டு, அதுகுறித்த விபரங்களை தாம் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கையில், சிறிதரன், குகதாசன் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய மூவரும் கட்சிக்குத் தெரியாமல், முன்னைய இணக்கப்பாடுகளுக்கு மாறாக தாமாகவே ஒரு திட்டத்தை முன்வைத்து, இணக்க முயற்சிகளை வேண்டுமென்றே குழப்ப முயற்சிக்கின்றனர் என பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் தெரிவித்தார்.

வழக்கின் பிரதிவாதிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவுவதாக மன்றில் சுட்டிக்காட்டிய வாதிகள் தரப்பு சட்டத்தரணி, எனவே இதற்கு இணக்கமான முறையில் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் அருகியிருப்பதாகவும், வழக்கு விசாரணை நடத்தியே தீர்வுகாணவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா அப்பதவியிலும், உயிருடனும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதனையடுத்து வழக்கில் அவரது இடத்துக்கு பதில் தலைவரின் பெயரை பிரதிவாதியாக சேர்ப்பதா என்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32
news-image

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ்...

2025-03-18 21:18:31
news-image

இலங்கை - இந்தியா பாலம் :...

2025-03-18 17:21:46
news-image

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; முறையாக...

2025-03-18 15:45:12
news-image

ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரிப்பதே தேசிய மக்கள்...

2025-03-18 17:28:27
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம் : பொது...

2025-03-18 17:24:12
news-image

6 அரசியல் கட்சிகள், 11 சுயாதீன...

2025-03-18 19:22:34
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து சட்ட அமுலாக்க...

2025-03-18 17:22:39