துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு; இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கோட்டா அதிகரிப்பு

Published By: Vishnu

14 Feb, 2025 | 11:31 PM
image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் துருக்கிக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் தூதுவர் செமி லுட்பூ டர்கட் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளார்.

துருக்கியில் கல்வி கற்பதற்கு இலங்கை மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 15 புலமைபரிசல் கோட்டா 25 ஆக அதிகரிக்கப்படும் என்று தூதுவர் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும், துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்பூ டர்கட்டுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (14) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு,இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என துருக்கி தூதுவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்துக்கு துருக்கி குடியரசின் பாராட்டினைத் தெரிவித்த தூதுவர் ' டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய மக்களின் வறுமையை மட்டுப்படுத்துவதற்கு' அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக குறிபபிட்டுள்ளார்.

கல்வி, சுகாதாரம்,விவசாயம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு துருக்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதுடன் அதற்கான ஒப்பந்தங்களை கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் கல்வி கற்பதற்கு இலங்கை மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 15 புலமைப்பரிசில் கோட்டா 25 ஆக அதிகரிக்கப்படும் என்று தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க துருக்கிக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் தூதுவர் அழைப்பு விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32
news-image

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ்...

2025-03-18 21:18:31
news-image

இலங்கை - இந்தியா பாலம் :...

2025-03-18 17:21:46
news-image

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; முறையாக...

2025-03-18 15:45:12