இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த யூ எஸ் அய்ட் நிறுவனத்தினால் நிதி வழங்கப்பட்டுள்ளது; அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் - சமன் ரத்னப்பிரிய

Published By: Vishnu

14 Feb, 2025 | 07:51 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த யூ எஸ் அய்ட் நிறுவனத்தினால் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல் ட்ரம் தெரிவித்துள்ளார். அதனால் இதுதொடர்பான அறிக்கையை பெற்றுக்கொண்டு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அமெரிக்க ஜனாதிபதி டொனல் ரம்பின் தீர்மானத்துக்கு அமைய  உலக நாடுகளுக்கு நன்கொடை வழங்கும் யூ எஸ் அய்ட் நிறுவனத்தின்  நிதி தவறாக பயன்படுத்திய நிறுவனங்களை மூடிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரம்பின் இந்த தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம். குறிப்பாக யூ எஸ் அய்ட் நிறுவனம் இலங்கைக்கு 260 மில்லிய் டொர் வழங்கி இருப்பதாக இலோன் மஸ்க் அது தொர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன் மூலம் இலங்கையில் ஆட்சி மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று அந்த நிதியில் 8மில்லியன் டொலர் பாலின சமத்துவத்தை அபிவிருத்தி செய்யவும் வழங்கி இருக்கிறது. அந்த பிரஜைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். அதில் பிரச்சினை இல்லை. ஆனால் அதனை அபிவிருத்தி செய்வது என்பது நாடு, கலாசாரம் என்றவகையில் பாதிப்பான விடயமாகும்.

பாலின சமத்துவத்தை அபிவிருத்தி செய்ய 8மில்லியன டொலர் (240 கோடி) வழங்கி இருந்தால், அது யாருக்கு வழங்கியது. எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, அதன் மூலம் யார் நன்மை பெற்றார்கள் என்ற விடயத்தை வெளிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.

குறிப்பாக அரசாங்கத்தின் பிரதானி ஒருவருக்கு எதிராகவும் இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. அதனால் ஆட்சி மாற்றுவதற்கு யூ எஸ் அய்ட் நிறுவனத்தினால் பணம் வழங்கப்பட்டிருந்தால், அது சட்டவிராேதம். ஒரு நாட்டின் ஆட்சி மாற்றத்துக்கு யூ எஸ் அய்ட் நிறுவனத்தினால் பணம் வழங்க முடியாது.

அபிவிருத்தி திட்டங்களுக்கே நிதி வழங்க முடியும். ஆனால் ஆட்சி மாற்றவும் பணம் வழங்கப்பட்டுள்ளதாக டொனல் ட்ரம் தெரிவித்துள்ளார்.

அதனால் இதுதொடர்பான அறிக்கையை நாட்டுக்கு பெற்றுக்கொண்டு, பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து, இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு இல்லாமல் தங்களின் உறுப்பினர்கள் இதனுடன் தொடர்புபட்டிருப்பதால், அதனை மறைத்துவிட முயற்சிக்க வேண்டாம் எனவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35
news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15