உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த பாடம் புகட்ட காத்திருக்கின்றனர் - சுஜித் சஞ்சய பெரேரா

14 Feb, 2025 | 04:51 PM
image

(எம்.மனோசித்ரா) 

எல்பிட்டிய பிரதேசசபைத் தேர்தலைப் போன்று, ஏனைய பிரதேசசபைகளிலும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு நிகரான பலத்தைப் பெற முடியும். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த பாடம் புகட்ட காத்திருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் , இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். அதற்காக நியமிக்கப்பட வேண்டிய வேட்பாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

35 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வேட்புமனு கோரப்பட்டாலும், அதனை தாக்கல் செய்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

இந்த அரசாங்கத்துக்கு மேடை பேச்சுக்கள் மாத்திரமே முடியும். செயலால் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது என்று தற்போது நிரூபனமாகியுள்ளது.

எனவே இந்த அரசாங்கத்துக்கு விரைவில் ஒரு செய்தியைக் கூற வேண்டும் என்பதே நாட்டு மக்களின் நிலைப்பாடாகவுள்ளது. அதற்கமைய உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த பாடம் புகட்ட காத்திருக்கின்றனர்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் மாத்திரமின்றி ஏனைய உத்தேச தேர்தல்கள் தொடர்பிலும் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எல்பிட்டிய பிரதேசசபைத் தேர்தலைப் போன்று, ஏனைய பிரதேசசபைகளிலும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு நிகரான பலத்தைப் பெற முடியும். எதிர்க்கட்சிகள் தனித்து போட்டியிட்ட போது தான் இந்த பெறுபேறு கிடைக்கப் பெற்றது. எனவே நாம் கூட்டணியமைத்தாலும் தனித்து போட்டியிட்டாலும் அரசாங்கத்துக்கு சவாலான பெருபெறுகளைப் பெறுவோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை...

2025-03-23 12:50:49
news-image

இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என தெரிவித்துக்கொண்டு...

2025-03-23 12:38:36
news-image

வெடிமருந்து, உள்நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது...

2025-03-23 12:44:52