நானுஓயாவில் வீடொன்றில் தாழிறங்கிய நிலம்! - தரை, சுவர்களில் வெடிப்பு!

14 Feb, 2025 | 04:49 PM
image

நுவரெலியா பிர­தேச செய­ல­கத்துக்குட்­பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம சேவகர் பிரி­வி­லுள்ள மஹாஎலிய தோட்டத்தில் நேற்று (13) அதிகாலையில் தனி வீடு தாழிறங்கி, தரை மற்றும் சுவர்களில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டன. 

இதனால் அந்த வீட்டில் வசித்த நான்கு பேர் அடங்கிய குடும்பத்தினர் தற்­கா­லி­க­மாக உறவினர் வீட்டில் தேவை­யான ஏற்­பா­டு­கள் செய்யப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­துக்கு தேவை­யான முதற்­கட்ட உத­வி­களும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் தோட்ட முகாமையாளர், கிராம சேவகர் மற்றும் நானுஓயா  பொலி­ஸா­ருக்கும் தகவல் வழங்­கப்­பட்­ட­துடன் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் வேறோர் இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

மேலும், வீட்டின் சுவர்கள் அனைத்திலும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சமையலறை உட்பட இரண்டு அறைகள் முழுமையாக பாதிக்கபட்டுள்ளதாகவும்  வீட்டினைச் சுற்றி  நிலம் வெடித்துள்ளதுடன் நிலம் தாழிறங்கியுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

எனவே, அந்த வீட்டில் பாரிய பாதிப்பு ஏற்படுவதற்கு முன் உரிய அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:23:35
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08