ரஸ்ய உக்ரைன் யுத்தம் குறித்து உக்ரைன் இல்லாமல் அமெரிக்காவும் ரஸ்யாவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளதை தொடர்ந்து உக்ரைனிற்கு அமெரிக்கா துரோகமிழைக்கின்றதா என்ற கேள்வி சர்வதேச அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
எனினும் இதனை மறுத்துள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் அமெரிக்கா உக்ரைனிற்கு துரோகமிழைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஸ்ய ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றுவதற்காக நான் ரஸ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த கருத்திற்கு சர்வாதிகாரத்திற்கான வெகுமதி என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இதனை நிராகரித்துள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அது உங்களுடைய மொழி என்னுடையதில்லை இது நிச்சயமாக துரோகமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உக்ரைன் இல்லாமல் எந்த வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறக்கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
ரஸ்யா என்பது உக்ரைனிற்கு மாத்திரம் அச்சுறுத்தல் இல்லை என்பதை நினைவில் வைத்திருப்பது அவசியம் என பிரிட்டனின் பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார்.
எதிர்கால பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனும் உள்வாங்கப்படுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இல்லாமல் உக்ரைன் குறித்து பேச்சுவார்த்தைகள் இல்லை என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தொடர்பில் அமெரிக்க தனது வெளிவிவகார கொள்கைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
உக்ரைன் 2014இல் அதன் எல்லைகள் காணப்பட்ட நிலைக்கு மீண்டும் திரும்புவது சாத்தியமற்ற விடயம் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்பீட்டே ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நேட்டோவில் இணைவது பேச்சுவார்த்தைகள் மூலம் சாத்தியமாக கூடிய விடயமில்லை என தெரிவித்துள்ள அவர்உக்ரைனின் பாதுகாப்பை ஐரோப்பா உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM