ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால அரசியல் குறித்து விசேட சந்திப்பு ; முக்கிய எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பலரும் பங்கேற்பு

14 Feb, 2025 | 03:55 PM
image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் குறித்து கொழும்பில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனவரி 30ஆம் திகதி ரணில் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள அமாரி ஹோட்டலில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, நிமல் லன்சா, பிரேம் நாத் சி தொலவத்த, உதய கம்மன்பில மற்றும் ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன,

இது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடலின் தொடர்ச்சியாகும். அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்காத ஏனைய சகல அரசியல் கட்சிகளுடனும் இணைந்து சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிலைவரம் குறித்து மதிப்பாய்வு செய்கின்றோம். அரசாங்கத்தின் அடக்குமுறைகள், அரசியல் பழிவாங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்படுகிறது. இணைந்து செயற்படுவதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

நிமல் லன்சா தெரிவிக்கையில், இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். அரசாங்கமும் மக்களுக்கு பாரிய வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றது. நாமும் அரசாங்கத்துக்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தப் போவதில்லை. 5 ஆண்டுகள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை வேடிக்கை பார்க்கப் போகின்றோம் என்றார்.

உதய கம்மன்பில தெரிவிக்கையில், கலந்துரையாடல்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை எதிர்க்கட்சிகளின் இரகசியமாகும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த கருத்து பரிமாற்றமும் இடம்பெறுகிறது. வேலை செய்ய முடியாத அரசாங்கத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதால் நாடு எதிர்நோக்கிய அபாயம் தொடர்பிலேயே பிரதானமாக அவதானம் செலுத்துகின்றோம்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த கருத்து வெளியிடுகையில், அரசாங்கத்துக்கு எதிராக ஏதேனும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்திலிருப்பவர்கள் ஆரம்பத்தில் ஆயுதங்களை ஏந்தி பின்னர் ஜனநாயகத்தை பின்பற்றியவர்களாவர். பல்கலைக்கழகங்களில் கூட இவர்களது அரசியல் செயற்பாடுகள் இவ்வாறு தான் காணப்படுகின்றன.

எனவே இவர்களிடமிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே எமது நோக்கமாகும். ஏனைய கட்சிகள் ஜனநாயக ரீதியாக ஆட்சியைப் பெறுவதற்கே முற்படுகின்றன. ஆனால் இந்த அரசாங்கம் 'நாம் மீளக் கையளிப்பதற்காக அதிகாரத்தைப் பெறவில்லை' என்று கூறுகின்றது. அவ்வாறெனில் பலவந்தமாக அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள இவர்கள் முற்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25