ஊடகத்துறையின் விருட்சம் விடைபெற்றுவிட்டது என மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் இறுதிக் கிரியையில் கலந்துகொண்டு அஞ்சலி உரையாற்றிய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஒருவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதன் அர்த்தம் அவரது இறுதி நிகழ்வில் தெரியும். அதற்கு மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இழப்பு எடுத்துக்காட்டாக உள்ளது என்றும் இதன்போது டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
பாரதியின் புகழுடலுக்கு தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்திய டக்ளஸ் தேவானந்தா பாரதியின் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துவிட்டு தனது அஞ்சலி உரையினையும் ஆற்றினார்.
உடல் நலத்தால் பாதிக்கப்பட்டிருந்த அமரர் பாரதி இராஜநாயகம் கடந்த 9ஆம் திகதி தனது 62ஆவது வயதில் காலமானார்.
இந்நிலையில் இன்றைய தினம் (13) அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச ஊடக துறைசார் தோழர்கள், அரசியல் தலைவர்கள், சமூக செயற்பட்டாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பாரதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி உரைகளும் வழங்கினர்.
பாரதியின் அழிக்கப்பட முடியாத வரலாற்றுத் தடங்களை நினைவுகூரி, தமது உணர்வுகளை பலரும் அஞ்சலி உரையினூடாக வெளிப்படுத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM