“இதுதான் நீங்கள் வழங்கும் நீதியா? தேசிய மக்கள் சக்தியின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை எங்கு கண்டாலும் கேளுங்கள்”

13 Feb, 2025 | 11:04 AM
image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் யாழ்மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்களிடம் இதுதான் நீங்கள் வழங்குகின்ற நீதியா என கேள்வி கேளுங்கள் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் வேண்டுகோள் விடுத்துள்ளார்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்க ஒருவர் இருக்கின்றார் ஜேவிபியின் பிரதான நபர் சந்திரசேகரன் என்று,இன்று அவர் அதிகாரம் படைத்த நபராகயிருக்கின்றார்.

தயவு செய்து அவரை எங்கே சந்தித்தாலும், இதுதானா உங்கள் நீதியா என கேளுங்கள். அவர்களை வேறு எதற்கும் அனுமதிக்கவேண்டாம் முதலில் கேளுங்கள்.

உலகிலேயே நீதிவாய்ந்தவர்களாக இடதுசாரி தத்துவம் பேசுபவர்களாக தங்களை காட்டிக்கொள்பவர்கள் எந்தவித நீதியும் அற்றவர்களாக காணப்படுகின்றனர்.

இவர்களின் கரங்களில் ( தையிட்டி விகாரைக்கு முன்னாள் பொலிஸார் படையினர்) ஒரு ஆவணமில்லை, வீதியை மறிப்பதற்கு ஒரு ஆவணம் தேவை,ஒரு ஊடகவியலாளரை மறிப்பதற்கு ஒரு ஆவணம் தேவை.

இது வெறுமனே தங்களிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்கின்றார்கள், அதிகார துஸ்பிரயோகம்தான் இங்கு இடம்பெறுகின்றது , அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கியது யார்? இந்த அரசாங்கம்

இந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நான்கு வெங்காயங்கள் இங்கு உள்ளனர், இதுதான் நீங்கள் வழங்குகின்ற ஆட்சியா என கேளுங்கள் எங்கு கண்டாலும் கேளுங்கள்.

இங்கிருந்து வாக்களித்த மக்கள் முதலில் வெட்கப்படவேண்டும்.

இதேமாதிரியான அதிகாரபோக்கையும் அக்கிரம போக்கையும்தான் நாங்கள் இதுவரை கண்டிருக்கின்றோம், இதன் தொடர்ச்சியை தான் இந்த அரசாங்கமும் இதுவரை செய்கின்றது.

இந்த அரசாங்கத்தின் நபர்களை எங்கு சந்தித்தாலும் நீங்கள் கேட்கவேண்டிய முக்கிய கேள்வி- இந்த விசர்க்கூத்துக்களை காட்டாமல் மக்களிற்கான நீதியை வழங்க சொல்லி கேளுங்கள்

சாதாரணமாக அனைத்து மக்களிற்கும் சமமாக இருக்ககூடிய சட்டம் தையிட்டியில் உள்ளவர்களிற்கு மாத்திரம் வேறுமாதிரியாக உள்ளது என்றால் இது என்ன நாடு?

இதனை தட்டிக்கேட்கின்ற ஆட்களை நோக்கி எவ்வளவு பேர் கேள்வி கேட்கின்றார்கள் யாரை நோக்கி கேள்வி கேட்கவேண்டும்?அதிகாரத்தையும் இந்த அரசாங்கத்தையும் நீதிமுரணாக செயற்பட்டவர்களை நோக்கிதான் எப்போதும் கேள்வி கேட்கவேண்டும்.

ஆனால் கேள்விகள் யாரை நோக்கி கேட்கப்படுகின்றது போராடுகின்ற மக்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் நோக்கி கேட்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32
news-image

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ்...

2025-03-18 21:18:31
news-image

இலங்கை - இந்தியா பாலம் :...

2025-03-18 17:21:46
news-image

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; முறையாக...

2025-03-18 15:45:12