உணவகத்தில் வாங்கிய குளிர்பானத்தை அருந்திய தந்தையும் மகளும் வைத்தியசாலையில் அனுமதி

13 Feb, 2025 | 11:20 AM
image

பலாங்கொடை, கிரிந்திகல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கிய குளிர்பானத்தை அருந்திய தந்தையும் மகளும் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது , 

இரத்தினபுரி, கெடன்தொல பிரதேசத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று பலாங்கொடை பிரதேசத்திற்குச் சென்றிருந்த போது உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளனர்.

இதன்போது, தந்தையும் 09 வயதுடைய மகளும் உணவகத்திலிருந்த குளிர்பானம் ஒன்றை வாங்கி அருந்தியுள்ளனர்.

பின்னர், தந்தையும் மகளும் திடீரென சுகயீனமுற்றுள்ள நிலையில் உடனடியாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து, வைத்தியசாலை வட்டாரங்கள் இது தொடர்பில் பலாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

2025-03-21 21:19:44
news-image

ச.தொ.ச. நிவாரண பொதியில் ஏன் தனியார்...

2025-03-21 21:20:24
news-image

வேட்புமனு நிராகரிப்பு எதிராக சட்டநடவடிக்கை

2025-03-21 22:55:26
news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10