இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றது.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பெருந்திரளானோர் வருகைதந்து மஞ்சத் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
தைப்பூச தினத்தன்று காலை 5.30 மணிக்கு அபிஷேகங்கள், விசேட பூஜை, வழிபாடுகள் ஆரம்பமாகி, தொடர்ந்து காலை மருதனார் மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனியின் பின்னர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
பாற்குட பவனியை தொடர்ந்து, ஆலயத்துக்கு சொந்தமான சங்குவேலியில் உள்ள வயலில் நெல் அறுவடை செய்யப்பட்டு, அதனை எருது வண்டியில் ஆலயத்துக்கு பாரம்பரிய முறைப்படி கொண்டுசென்று, ஆலய முன்றலில் நெல் குத்தி, அரிசியாக்கி, அந்த அரிசியில் பொங்கல் தயாரித்து படைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாலை விசேட பூஜை, வழிபாடுகள், வசந்தமண்டப பூஜை நடைபெற்றன.
அதற்கடுத்து, ஆறுமுகசுவாமி வள்ளி தெய்வானை சமேதரராய் உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
திருமஞ்சத்தில் முருகப்பெருமான் வீதியுலா வரும் வேளை வீதியில் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.
இம்முறை திருமஞ்சத்துக்கு வர்ணப் பூச்சு வேலைகளுடன் புதுப்பொலிவு பெற்று வீதியுலா நிகழ்ந்தேறியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM