தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன் உயிரிழப்பு

12 Feb, 2025 | 03:19 PM
image

அம்பாறை  மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புறநகர் பிரதேசத்தில் தேங்காய் பறிக்கத்  தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

நிந்தவூர்,  அல்மினன் வீதியைச் சேர்ந்த 25  வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன்  கடற்தொழில் மேற்கொள்பவர் என்பதுடன் 11 பேர் கொண்ட குடும்பத்தில் முதலாவது பிள்ளையாவார்.

உயிரிழந்த இளைஞன்  இன்று விடுமுறை தினம் என்பதால் தென்னை மரத்தில் தேங்காய்களை பறித்துக்கொண்டிருக்கும் போது மரத்தில் இருந்த காய்ந்த ஓலையொன்றைப் பிடித்துள்ள நிலையில் திடீரென கால் வழுக்கி கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும்,  சடலமானது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட  பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. மண்முனை பாலத்திற்கு அருகில் சட்டவிரோத...

2026-03-12 15:42:14
news-image

ஆபத்தான முறையில் முச்சக்கரவண்டி செலுத்திய இளைஞர்...

2026-03-12 15:31:36
news-image

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர்...

2026-03-12 15:27:26
news-image

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி நேரடி...

2026-03-12 15:27:01
news-image

யாழில் கார் - முச்சக்கரவண்டி மோதி...

2026-03-12 14:32:42
news-image

கண்டியில் பாடசாலை பணிப்பாளரின் வாகனம் மோதி...

2026-03-12 14:22:29
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-12 14:14:39
news-image

​ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் என்பது...

2026-03-12 14:00:02
news-image

மின்னல் குறித்து எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-03-12 13:57:58
news-image

மட்டக்களப்பில் விபத்துகளைத் தடுக்க விசேட நடவடிக்கை...

2026-03-12 14:08:47
news-image

யாழில் மாமியை வெட்டிப் படுகொலை செய்த...

2026-03-12 13:10:52
news-image

பிலிப்பைன்ஸ் பயணத்தை நிறைவு செய்து பிரதமர்...

2026-03-12 12:43:57