தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன் உயிரிழப்பு

12 Feb, 2025 | 03:19 PM
image

அம்பாறை  மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புறநகர் பிரதேசத்தில் தேங்காய் பறிக்கத்  தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

நிந்தவூர்,  அல்மினன் வீதியைச் சேர்ந்த 25  வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன்  கடற்தொழில் மேற்கொள்பவர் என்பதுடன் 11 பேர் கொண்ட குடும்பத்தில் முதலாவது பிள்ளையாவார்.

உயிரிழந்த இளைஞன்  இன்று விடுமுறை தினம் என்பதால் தென்னை மரத்தில் தேங்காய்களை பறித்துக்கொண்டிருக்கும் போது மரத்தில் இருந்த காய்ந்த ஓலையொன்றைப் பிடித்துள்ள நிலையில் திடீரென கால் வழுக்கி கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும்,  சடலமானது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட  பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25