(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்த சிறுவனின் மரணம் குற்றமொன்றின் பிரதிபலனா என்பது தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 25ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (11) அறிவித்தது.
இந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (12) மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுலுவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது இந்த விவகாரத்தில் சத்திர சிகிச்சையோடு தொடர்புடைய வைத்தியர் அவுஸ்ரேலியாவில் இருந்து வழங்கிய வாக்குமூலம் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் ஏனைய சாட்சியாளர்களின் வாக்குமூலங்கள், சாட்சிகள் பெறப்பட்ட நிலையில் சிறுவனின் மரணம் கொலையா அல்லது குற்றமொன்றின் எதிரொலியா அல்லது வேறு காரணத்தால் நிகழ்ந்ததா என்பது தொடர்பிலான மரண விசாரணையின் தீர்ப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிப்பதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி இந்த வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனையை சேர்ந்த 3 வயது சிறுவன் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின் கடந்த 2023 ஜூலை 28 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
சத்திரசிகிச்சையின் பின்னரான தொற்று பரவல் மரணத்துக்கு காரணம் என லேடி ரிஜ்வே வைத்தியசாலை பணிப்பாளர் அப்போது குறிப்பிட்ட நிலையில் பாரிய மருத்துவ தவறொன்று அல்லது மனித உறுப்பு வர்த்தக நடவடிக்கை ஒன்று சிறுவனின் மரணத்தின் பின்னணியில் இருக்கலாம் என சிறுவனின் குடும்பத்தார் சார்பில் குற்றம் சுமத்தப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM