தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்ரம் பிரபு மற்றும் புதுமுக நடிகர் எல். கே. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் விக்ரம் பிரபு, எல். கே. அக்ஷய் குமார் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
உண்மை சம்பவங்களை தழுவி எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித் குமார் தயாரிக்கிறார்.
இயக்குநரும், நடிகருமான தமிழ் கதை எழுதி இருக்கும் என்ற திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விபரங்களை விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கதையின் நாயகர்களில் ஒருவராக அறிமுகமாகும் எல். கே. அக்ஷய் குமார் - விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்', 'லியோ', விக்ரம் நடிப்பில் வெளியான 'மகான்' உள்ளிட்ட பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித் குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM