ஜப்பானின் நிதி உதவியில் அநுராதபுரத்தில் இரண்டாம் கட்ட நீர் விநியோகத் திட்டம் - விசேட கலந்துரையாடல்  

11 Feb, 2025 | 01:48 PM
image

அநுராதபுரம் மாவட்டத்தின் மிஹிந்தலை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் காணப்படும் மஹகனந்தராவ நீர்த்தேக்கத்தை பயன்படுத்தி ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அநுராதபுரம் வடக்கு பாரிய நீர் விநியோகத் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

இதன் முதலாம் கட்ட பணிகள் நிறைவடைந்த பின்னர், அநுராதபுரம் மாவட்டத்தின் ரம்பாவ பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மதவாச்சி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பொதுமக்களின் நன்மை கருதி கடந்த ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது. 

இப்பாரிய நீர் விநியோகத் திட்டத்தின் முதலாம் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் நாட்டின் தூதுவர் அக்கிஓ இசோமடா Akio Isomata உட்பட ஜப்பானின் விசேட தூதுக் குழுவினருக்கும் அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சித் விமல் சூரிய உட்பட தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையே இரு தரப்பு விசேட கலந்துரையாடல் அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்றது.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார் நவரத்னவும் கலந்துகொண்டார். 

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஜப்பான் நாட்டின் விசேட தூதுக் குழுவினர் அநுராதபுரம் வடக்கு நீர் விநியோகத் திட்டத்தினை நேரில் சென்று பார்வையிட்டதுடன், நீர் விநியோகத் திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளுக்கு  உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04
news-image

நோயாளிகளை சிரமப்படுத்தும் வகையில் செயல்பட்டால், மக்கள்...

2025-03-16 17:18:28
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படாமல்...

2025-03-16 17:21:56
news-image

கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் ஆயிரம் பாடசாலைகளுக்கு...

2025-03-16 19:45:47
news-image

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் ஹெரோயினுடன்...

2025-03-16 20:28:10
news-image

சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

2025-03-16 18:18:12
news-image

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை பார்வையிட்டார்...

2025-03-16 17:35:19