43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கல் : மதிப்பீட்டு அறிக்கையை மீளாய்வு செய்ய வேண்டும் - பிரதீபா மஹாநாம வலியுறுத்தல்

Published By: Digital Desk 2

10 Feb, 2025 | 05:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் 43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைப்பின் மதிப்பீட்டு அறிக்கை மீளாய்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் 43 பேர் பல மில்லியன் ரூபாய் அளவில் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொண்டுள்ளமை தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

சுனாமி பேரழிவுக்கு பின்னர் 2005 ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் பிரகாரம் தான் இழப்பீட்டுத் தொகை  வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இயற்கை மற்றும் இதர அனர்த்தத்தினால் வீடு ஒன்று முழுமையாக சேதமடைந்தால், 2005 ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம்  உயர்ந்தபட்சம் 25 இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.

ஆனால் 2022 ஆம் ஆண்டு வன்முறை சம்பவத்தை தொடர்ந்து வீடுகளை இழந்ததாக குறிப்பிட்டுக் கொண்டு 43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடி கணக்கில் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

சட்டத்தின் பிரகாரம் ஒருவருக்கு தலா 25 இலட்சம் ரூபாவை வழங்கியிருக்க வேண்டும். அல்லது நடைமுறை காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 50 இலட்சம் ரூபாவை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் சட்டத்துக்கு முரணாக கோடி கணக்கில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டவர்களில் ஒருசிலர் தாங்கள் இழப்பீட்டுத் தொகையை கோரவில்லை என்று தற்போது குறிப்பிடுகிறார்கள். தமக்கு இழப்பீடு வேண்டும் என்று இந்த 43 பேரும் கடந்த அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்கள்.இதனைத் தொடர்ந்து பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் மதிப்பீடு குழு ஒன்று நியமிக்கப்பட்டு அதற்கமைவாகவே இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

அரச நிவாரண சேவை சட்டத்தின் பிரகாரம் இந்த இழப்பீடு வழங்கப்படவில்லை. ஆகவே பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மதிப்பீடு குழு அறிக்கை பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25