அவசர மின் தடை தொடர்பிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது ; இலங்கை மின்சாரசபை

10 Feb, 2025 | 02:17 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) ஏற்பட்ட திடீர் மின் வெட்டு தொடர்பான குறுகிய கால அறிக்கை மின்சக்தி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. 

ஒரே சந்தர்ப்பத்தில் முழு நாட்டில் மின் தடை ஏற்பட்டமைக்கான காரணம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் தலைவர் தலிக் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார்.

இனிவரும் நாட்களிலும் மின் விநியோகத்தடையை அமுல்படுத்த வேண்டியேற்படுமா என்பது தொடர்பிலும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. 

தற்போதுள்ள நிலைவரத்தின் அடிப்படையில் ஏற்படக் கூடிய அவசர மின் தடை தொடர்பிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. 

அதற்கமைய நாளாந்தம் மின்சாரத்தை வழங்குவது தொடர்பில் விரைவில் மின்சாரசபை அறிவிக்கும் என தலிக் சியம்பலாப்பிட்டி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை தொடர்பில் இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் காணப்படும் குறைந்த மின்சாரத் தேவையும், ஒப்பீட்டளவில் சூரிய சக்தியின் குறைந்த நிலைத்தன்மையும் மொத்த மின்சார உற்பத்தியில் அதிக சதவீதத்தை உற்பத்தி செய்தமையால் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மையே அதற்கான காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நிலைமையை முறையான விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாணந்துறை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக குறைந்த மின்சார தேவை மற்றும் அதிக சூரிய மின் உற்பத்தி காரணமாக தேசிய மின்சார கட்டமைப்பு சமநிலையற்றதாக மாறியது. இதன் விளைவாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

எதிர்காலத்தில் இதுபோன்ற மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, மின்சார சேமிப்பு மின்கல வசதிகள் உள்ளிட்ட திட்டங்களை விரைவுபடுத்த இலங்கை மின்சார சபையும் வலுசக்தி அமைச்சும் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருவதாக அந்த  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை...

2025-03-23 12:50:49
news-image

இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என தெரிவித்துக்கொண்டு...

2025-03-23 12:38:36