எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு வழங்கியமை ; ரணில் தனது பதவியை தக்கவைக்க வழங்கிய இலஞ்சம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

09 Feb, 2025 | 05:19 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

ஆட்சியாளர்கள் தமது கட்சியின் ஆதரவாளர்களை பேரவாவியில் மூழ்கடிக்க செய்து விட்டு தாம் நட்டயீட்டு சமுத்திரத்தில் நன்றாக நீந்தி குளித்துள்ளனர். நபர் ஒருவருக்கு இழப்பீட்டு தொகையாக 25 இலட்சம் ரூபாவையே பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 இலட்சம் முதல் 980 இலட்சம் வரை நட்டயீட்டை பெற்றுக்கொண்டுள்ளனர். 

ரணில் விக்கிமரசிங்க தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக தன்னுடன் இருந்தவர்களுக்கு அரச திறைசேரியிலிருந்து பெற்றுக்கொடுத்த இலஞ்சமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பேராதனையில்  இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதுடன் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நட்டயீடு வழங்கப்பட்ட காலப்பகுதியில் அந்த பகுதிக்குரிய பிரதேச செயலாளர்கள் மதீப்பிட்டாளர்கள் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

அப்போதைய ஆளுங்கட்சியின் பிரதம கொரடாவாக இருந்த பிரசன்ன ரணதுங்கவினால் கடிதம் அனுப்பட்டு பாராளுமன்றத்துக்கு அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அங்கு சென்றிருந்த அதிகாரிகள் அப்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்ததுடன் அவர்களுக்கு அந்தகாலப்பகுதியில் அதிகமாக மதிப்பீடு செய்யுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டில் பேரிடர் ஒன்று ஏற்படுமனால் ஒரு நபருக்கு அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாவையே வழங்க முடியும். உண்மையில் அந்த தொகை கிடைப்பதில் சிரமம் உள்ளது.

ஆனால் அந்த காலப்பகுதியில் முறையாக நட்டயீட்டை பெற்றுக்கொள்வதில் முறைமை ஒன்று இருக்கவில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்க சட்டத்திட்டங்களை மாற்றி தேவையான வகையில் நட்டயீட்டை பெற்றுக்கொள்வதற்கான முறைமை உருவாக்கியுள்ளார்.

இங்கு சில பிரச்சினைகள் உள்ளன.43 பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 இலட்சம் முதல் 980 இலட்சம் வரை நட்டயீட்டை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவர்கள் நட்டயீட்டை மாத்திரம் அல்ல.சில நிறுவனங்களிடமிருந்து காப்புறுதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர். நாம் வெளியிட்ட பெயர் பட்டியிலிருந்து யார் காப்புறுதிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பதை காப்புறுதி நிறுவனங்கள் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் . 

அடுத்ததாக அவர்களது அசையும் அசையாத சொத்துக்கள் 800 900 இலட்சமாக இருந்தால் அவர்களது சொத்துக்கள் தொடர்பிலான அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்பிக்க வேண்டும்.

அதிக நட்டயீட்டை பெற்றுக்கொள்வதற்காக சிலர் தமது வீட்டில் நகைகள் இரத்தினகற்கள் இருந்தாக தெரிவித்துள்ளனர். நட்டயீட்டைப் பெற்றுக்கொண்டவர்களின் பிரதேசங்களில் உள்ள மக்கள் எம்மை அழைத்து அவ்வாறான சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனக்கூறுகிறார்கள்.

இரண்டு ஜன்னல்கள் மாத்திரமே சேதமடைந்திருந்தாக கூறுகின்றனர்.ஆனால் இவர்கள் எவ்வாறு இந்தளவு நிதியை பெற்றுக்கொண்டனர்? அவர்கள் தமது கட்சியின் ஆதரவாளர்களை பெரவாவியில் முழ்கடிக்கச்செய்து விட்டு தாம் நட்டயீட்டு சமுத்திரத்தில் நன்றாக நீந்தி நீந்தி குளித்துள்ளனர். இதுவே தற்போது புலப்படுகிறது.

எனவே இது தொடர்பில் நாம் விசாரணைகளை முன்னெடுப்போம்.இந்த நட்டயீடு மதிப்பீடு செய்யப்பட்ட விதம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவள்ளன. 

தமக்கு வழங்கப்பட்ட நட்டயீடு போதாது என ஒருவர் கூறுவதை பார்த்தேன்.இவர்கள் எவ்வாறு இவ்வளவு சொத்துக்களை கொண்டிருந்தார்கள் என்பது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கும்.

ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஜனாதிபதி பெற்றுக்கொடுத்தமைக்காவும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற வேண்டும் என்பதற்காகவும் தன்னுடன் இருந்தவர்களுக்காக திறைசேரியிலிருந்து பெற்றுக்கொடுத்த இலஞ்சமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16
news-image

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2025-03-21 13:00:45
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது...

2025-03-21 13:10:21
news-image

நாட்டை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கைகளுக்கு...

2025-03-21 13:09:27
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் ;...

2025-03-21 11:57:00
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-21 12:22:02
news-image

உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம்...

2025-03-21 12:24:26
news-image

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு...

2025-03-21 11:53:19
news-image

இலங்கைக்கு தீயணைப்பு வாகனங்களை வழங்க ஜப்பான்...

2025-03-21 12:22:41
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு -  6...

2025-03-21 12:08:17