ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதி டிக்கோயா சந்தியில், தனியார் பஸ்ஸூம் முச்சக்கர வண்டியும் மோதியதில் பெண் ஒருவர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து, இன்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை இடம்பெற்றுள்ளது.
டிக்கோயா ஆதார வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா அன்ஃபீல்ட் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, டிக்கோயா சந்தியில் திடீரென ஒரு பக்க வீதியில் திரும்பி, நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸூடன் பின்னால் மோதியதில், முச்சக்கர வண்டி வீதியின் குறுக்கே கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ஹட்டன் பொலிஸார், விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும், பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM