(நா.தனுஜா)
அண்மையில் தூதரகப்பணியகத்தலைவர் பதவிக்கு மேற்கொள்ளப்பட்ட பல நியமனங்கள் இலங்கை வெளிநாட்டு சேவையிலிருந்தல்லாமல் வெளிவாரியாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம், இதனூடாக தொழில்வாண்மை, தகுதி மற்றும் இராஜதந்திர நிபுணத்துவம் என்பன தொடர்பில் நிறுவப்பட்டிருக்கும் விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
உலக அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அதீத அர்ப்பணிப்பு, அனுபவம், நிபுணத்துவம் மற்றும் தொழில்வாண்மை மிகுந்த வெளிநாட்டு சேவை அதிகாரிகளைப் புறக்கணித்துள்ள இந்நியமனங்களால் நாம் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம். இலங்கை வெளிநாட்டு சேவை என்பது குறிப்பாக நாட்டின் வெளியுறவுக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும், அதன் சர்வதேச நலன்களைப் பாதுகாப்பதற்கும் விசேடமாகப் பயிற்சியளிக்கப்பட்ட தேர்ச்சிமிக்க அதிகாரிகளின் தொகுதியாகும். அவ்வாறிருக்கையில் அரசியல் நியமனங்களால் தொழில்வாண்மை மிகுந்த இராஜதந்திரிகளைத் தவிர்ப்பதானது, நிறுவன ஒருமைப்பாட்டைப் பலவீனப்படுத்துவதுடன் இலங்கையின் இராஜதந்திர அந்தஸ்தை நலிவடையச்செய்யும்.
வெளிநாடுகளிலுள்ள தூதரகப்பணியகங்களுக்குத் தலைமை வகிப்பதற்கு உயர் தொழிற்தகைமை கொண்ட இராஜதந்திர அதிகாரிகளை நியமித்தல், வெளிநாட்டு சேவையை அரசியல்மயமாக்கமின்றி தகுதி அடிப்படையில் நியமனங்களை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்த தற்போதைய அரசாங்கம், அதற்கு முற்றிலும் முரணான விதத்தில் செயற்படுகின்றது.
இவ்வாறு அரசியல் செல்வாக்கு மூலமான நியமனங்களைத் தொடர்வது இலங்கையின் இராஜதந்திர உத்தியோகத்தரணியின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்புக்கு உட்படுத்துவதுடன், தீவிர பயிற்சி பெற்றவர்களும், பரந்துபட்ட சர்வதேச அனுபவத்தைக் கொண்டவர்களுமான தொழில்வாண்மை மிகுந்த இராஜதந்திர அதிகாரிகளை மனந்தளரச்செய்கிறது.
இத்தகைய நடைமுறை முடிவுக்குவரும் எனவும், அரசியல் செல்வாக்கை விட நாட்டின் நலனை முன்னிறுத்தி சேவையாற்றும் வலுவானதும், சுதந்திரமானதுமான வெளிநாட்டு சேவை ஊக்குவிக்கப்படும் எனவும் நாம் நம்பியிருந்தோம். ஆனால் இந்நிலை தொடர்வது வெளிநாட்டு சேவைக்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்நியமனங்களை மறுபரிசீலனை செய்யுமாறும், தகுதி அடிப்படையிலான தேர்வுகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். அதுமாத்திரமன்றி தொழில்வாண்மை, சுயாதீனத்துவம் மற்றும் செயற்திறன்மிக்க வெளிநாட்டு சேவைக்கு முன்னுரிமை அளிக்குமாறும் நாம் கேட்டுக்கொள்கிறோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM